Salem மாவட்டத்தில் மாவட்ட வள பயிற்றுநர் பணிக்கு தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் இரா. பிருந்தாதேவி, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளதாவது:
TAMILNADU மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், சேலம் மாவட்டத்தில் மாதிரி வட்டார அளவிலான கூட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள மேலாண்மை இயக்குநர், சென்னை அவர்களின் அறிவுரையின்படி, மாதிரி வட்டார அளவிலான கூட்டமைப்பிற்கான ஒருமாவட்டவள பயிற்றுநர் பணியிடத்திற்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இதற்கான வயது 01.11.2024ன் படி 25 முதல் 55 வயதிற்குள் இருக்க வேண்டும். மேலும் கல்வித்தகுதி & அனுபவம் ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் மூன்று வருட அனுபவம் அல்லது P.G.Diploma பயிற்றுநராக ஒரு வருட அனுபவம் ஏற்புடையது. அதேபோன்று TAMIL மற்றும் ENGLISH எழுத, படிக்க மற்றும் பேசுவதில் சிறப்புடையவராக இருத்தல் வேண்டும். தேர்ந்தெடுக்கப்படுபவர் மாவட்ட வள பயிற்றுநர் ஒப்பந்த அடிப்படையில் ஒரு வருடத்திற்கு மட்டும் நியமனம் செய்யப்படுவர்.
மேற்படி, விண்ணப்பங்களை நேரிலோ அல்லது அஞ்சல் வழியாகவோ இணை இயக்குநர் / திட்ட இயக்குநர், அறை எண்: 207, மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், சேலம் 636 001 என்ற முகவரிக்கு வருகின்ற 31.12.2024 மாலை 5.00 மணிக்குள் அனுப்பி வைக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்