புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டத்தின் கீழ் 8,997 சமையல் உதவியாளர் காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு மாதம் ரூ.3,000 தொகுப்பூதியத்தில் 8,997 காலி பணியிடங்களை நிரப்பிட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை அனுமதி.
தமிழ்நாடு முழுக்க அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மதிய உணவு இலவசமாகச் சத்துணவுத் திட்டத்தின் மூலம் வழங்கப்படுகிறது. தமிழகம் முழுக்க 8,997 சமையல் உதவியாளர் பணியிடங்கள் காலியாக இருக்கும் நிலையில், அதை நிரப்ப இப்போது சமூக நலத்துறை உத்தரவிட்டுள்ளது.
சமையல் உதவியாளர்கள்:
இந்த சத்துணவுத் திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்திடச் சமையல் உதவியாளர்களை வேலைக்கு எடுக்க சமூக நலத்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் முழுக்க 8,997 சமையல் உதவியாளர் பணியிடங்கள் காலியாக இருக்கும் நிலையில், அந்த பணியிடங்கள் அனைத்தும் நிரப்பப்பட உள்ளன. மாதம் ரூ.3,000 என்ற தொகுப்பூதியத்தில் இந்த காலியிடங்களை நிரப்ப அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கல்வித் தகுதி என்ன:
இந்த பணிக்கு விண்ணப்பிக்கக் குறைந்தபட்ச கல்வித் தகுதியாக 10வது தேர்ச்சி/தோல்வி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இதற்காக இணை இயக்குநர் நியமன அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்