Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

பொதுத்தேர்வு 2025 -பொதுத்தேர்வு அச்சத்தை போக்கும் சுயப் பரிசோதனை!

பொதுத்தேர்வு 2025 -பொதுத்தேர்வு அச்சத்தை போக்கும் சுயப் பரிசோதனை!
பள்ளி மாணவர்கள் எதிர்காலத்தை திட்டமிட அவசியமானதாக பகருதப்படும் 10, 1 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான அரசு பொதுத் தேர்வுகள் விரைவில் தொடங்க உள்ளன.

 பொதுத்தேர்வுக்குப் படிக்கும் போது வெறுமனே புத்தகத்தைப் புரட்டி மனப்பாடம் செய்தால் படித்தது நினைவில் நிற்காது. முக்கிய வினா- விடைகளை நன்கு மனதில் நிறுத் திப் படித்தும், எழுதியும் பார்க்க வேண்டும். பின்னர், ஒருமுறை தேர்வு போல் பார்க்காமல் எழுதி நாமே திருத்த வேண்டும். தவறுகள் இருந்தால் அவற்றை திருத்திக் கொண்டு மீண்டும் ஒருமுறை தவறில்லாமல் எழுதிப் பார்க்க வேண்டும். 

இவ்வாறாகப் புரிந்துகொண்டுப் படித்து எழுதினால் பாடங்கள் எளிதில் மறந்துவிடாது. மேலும், பொதுத்தேர்வு குறித்த பயத்தை போக்கவும் சுயத்தேர்வு வழிவகுக்கும். அதேபோல், ஒவ்வொரு நாளும் படிக்க வேண்டியப் பாடங்கள் குறித்து முன்கூட்டியே திட்டமிட்டு அதன் படி, படிக்க வேண்டும். படிக்கும்போதே கணிதம், இயற்பியல், வேதியியல் போன்ற பாடங்களில் வரும் முக்கியமான சமன்பாடுகள், சூத்திரங்களை தனியாக எழுதி வைத்து மனதுக்குள் சொல்லிப் பார்த்துக்கொள்ள வேண்டும். மாணவர்கள் பாடங்களை திட்டமிட்டு படிப்பதோடு, அவற்றை எழுதிப்பார்ப்பது சுயப்பரிசோதனை செய்துகொள்வது தேர்வு பயத்தைப் போக்கி வெற்றியை உறுதிப்படுத்தும்.

Post a Comment

0 Comments