Ticker

6/recent/ticker-posts

 முக்கிய செய்திகள்  

10th Std Exam Result -2025 - Direct link -CLICK HERE

11th STD Exam Result 2025 - Direct link -CLICK HERE

12th STD Exam Results 2025 - Direct Link -CLICK HERE

NPHH கார்டுகளை AAY கார்டுகளாக மாற்றக்கோரும் விண்ணப்பம்-CLICK HERE

கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சம்பந்தமான செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE 

JOIN TELEGRAM GROUP-CLICK HERE
JOIN WHATSAPP CHANNEL -CLICK HERE
JOIN GOOGLE NEWS -CLICK HERE

தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வு தேர்வு- புதிய அறிவிப்பு-2024-2025


தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வு தேர்வு- புதிய அறிவிப்பு-2024-2025

பார்வை 1-ல் காணும் அரசாணையின்படி, "தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வு தேர்வு

(TAMILNADU CHIEF MINISTER'S TALENT SEARCH EXAM- TNCMTSE 2023-2024 ஆம் கல்வியாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இக்கல்வியாண்டில் (2024-2025) அரசுப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணாக்கர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வு - (TAMILNADU CHIEF MINISTER'S TALENT SEARCH EXAM-TNCMTSE) 25.01.2025 (8) அன்று நடத்தப்படவுள்ளது.

படிப்புதவித் தொகை மற்றும் எண்ணிக்கை

இத்தேர்வில் 500 மாணவர்கள் மற்றும் 500 மாணவியர்கள் என மொத்தம் 1000 மாணக்கர்கள் நடைமுறையிலுள்ள இடஒதுக்கீட்டின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டு உதவித் தொகையாக ஒரு கல்வியாண்டிற்கு ரூ.10,000/- (மாதம் ரூ.1000/- வீதம்) இளநிலை பட்டப்படிப்பு வரை வழங்கப்படும்.


தேர்விற்கான பாடத் திட்டம்

தமிழ்நாடு அரசின் 9 மற்றும் 10-ஆம் வகுப்புகளில் கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடப் புத்தகங்களில் உள்ள பாடத் திட்டங்களின் அடிப்படையில் கொள்குறிவகையில் TNCMTSE தேர்வு இரு தாள்களாக நடத்தப்படும்.

தேர்வு நேரம்

இத்தேர்வானது தாள் 1 (கணிதம் 60 வினாக்கள்) காலை மணி 10.00 முதல் 12.00 வரையிலும், தாள் 2 (அறிவியல் மற்றும் சமூக அறிவியல் ல வினாக்கள்) பிற்பகல் மணி 2.00 முதல் 4.00 மணி வரையிலும் நடத்தப்படும்.

வெற்று விண்ணப்பங்கள் பதிவிறக்கம் செய்தல்

மாணாக்கர்கள் 30.11.2024 முதல் 09.12.2024 வரை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தினை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் தேர்வுக்கட்டணம் ரூ 50/-னை 09.12.2024 மாணக்கர்கள் பயிலும் பள்ளியின் தலைமையாசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும்.

தேர்விற்கு விண்ணப்பிக்கும் மாணாக்கர்களின் விவரங்களை பள்ளிகள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்தல் மற்றும் தேர்வுக்கட்டணத்தினை ஆன்லைனில் செலுத்துதல் குறித்தான தேதிகள் பின்னர் தெரிவிக்கப்படும்.

எனவே, 2024-2025 கல்வியாண்டில், அரசுப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணாக்கர்கள் "தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வினை" அறிந்துகொள்ளும் வகையில், தங்கள் ஆளுகைக்குட்பட்ட அனைத்து அரசு மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் உரிய அறிவுரைகள் வழங்கிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.


Post a Comment

0 Comments