பார்வை 1-ல் காணும் அரசாணையின்படி, "தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வு தேர்வு
(TAMILNADU CHIEF MINISTER'S TALENT SEARCH EXAM- TNCMTSE 2023-2024 ஆம் கல்வியாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இக்கல்வியாண்டில் (2024-2025) அரசுப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணாக்கர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வு - (TAMILNADU CHIEF MINISTER'S TALENT SEARCH EXAM-TNCMTSE) 25.01.2025 (8) அன்று நடத்தப்படவுள்ளது.
படிப்புதவித் தொகை மற்றும் எண்ணிக்கை
இத்தேர்வில் 500 மாணவர்கள் மற்றும் 500 மாணவியர்கள் என மொத்தம் 1000 மாணக்கர்கள் நடைமுறையிலுள்ள இடஒதுக்கீட்டின் அடிப்படையில் தெரிவு செய்யப்பட்டு உதவித் தொகையாக ஒரு கல்வியாண்டிற்கு ரூ.10,000/- (மாதம் ரூ.1000/- வீதம்) இளநிலை பட்டப்படிப்பு வரை வழங்கப்படும்.
தேர்விற்கான பாடத் திட்டம்
தமிழ்நாடு அரசின் 9 மற்றும் 10-ஆம் வகுப்புகளில் கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடப் புத்தகங்களில் உள்ள பாடத் திட்டங்களின் அடிப்படையில் கொள்குறிவகையில் TNCMTSE தேர்வு இரு தாள்களாக நடத்தப்படும்.
தேர்வு நேரம்
இத்தேர்வானது தாள் 1 (கணிதம் 60 வினாக்கள்) காலை மணி 10.00 முதல் 12.00 வரையிலும், தாள் 2 (அறிவியல் மற்றும் சமூக அறிவியல் ல வினாக்கள்) பிற்பகல் மணி 2.00 முதல் 4.00 மணி வரையிலும் நடத்தப்படும்.
வெற்று விண்ணப்பங்கள் பதிவிறக்கம் செய்தல்
மாணாக்கர்கள் 30.11.2024 முதல் 09.12.2024 வரை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தினை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் தேர்வுக்கட்டணம் ரூ 50/-னை 09.12.2024 மாணக்கர்கள் பயிலும் பள்ளியின் தலைமையாசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும்.
தேர்விற்கு விண்ணப்பிக்கும் மாணாக்கர்களின் விவரங்களை பள்ளிகள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்தல் மற்றும் தேர்வுக்கட்டணத்தினை ஆன்லைனில் செலுத்துதல் குறித்தான தேதிகள் பின்னர் தெரிவிக்கப்படும்.
எனவே, 2024-2025 கல்வியாண்டில், அரசுப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணாக்கர்கள் "தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வினை" அறிந்துகொள்ளும் வகையில், தங்கள் ஆளுகைக்குட்பட்ட அனைத்து அரசு மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் உரிய அறிவுரைகள் வழங்கிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்