Ticker

6/recent/ticker-posts

 முக்கிய செய்திகள்  

TET EXAM APPLY ONLINE 2025-PAPER I - PAPER II - DIRECT LINK -CLICK HERE

10th Std Exam Result -2025 - Direct link -CLICK HERE

11th STD Exam Result 2025 - Direct link -CLICK HERE

12th STD Exam Results 2025 - Direct Link -CLICK HERE

NPHH கார்டுகளை AAY கார்டுகளாக மாற்றக்கோரும் விண்ணப்பம்-CLICK HERE

கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சம்பந்தமான செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE 

JOIN TELEGRAM GROUP-CLICK HERE
JOIN WHATSAPP CHANNEL -CLICK HERE

Breaking-கல்வித்துறை அமைச்சர் வெளியிட்டுள்ள முக்கிய தகவல்

Emisசெயலியில் தகவல்களைப் பதிவேற்ற 1,800 பேர் விரைவில் நியமனம்: அமைச்சர்
எமிஸ்' செயலியில் தகவல்களைப் பதிவேற்ற 1,800பேர் விரைவில் நியமனம் செய்யப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

பெரம்பலூரில் தமிழ்நாடு பட்டதாரி, முதுநிலைப் பட்டதாரி ஆசி ரியர் கழகம் சார்பில், கடந்த கல்வி ஆண்டில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் சிறப்பிடம் பெற்ற அரசுப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கும், 100 சதவீத தேர்ச்சி பெற காரணமாகயிருந்த அரசுப் பள்ளிகளின் தலைமை ஆசிரி யர்களுக்குப் பரிசளிப்பு மற்றும் பாராட்டு விழா, பணி ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்குப் பாராட்டு விழா ஆகியன ஞாயிற்றுக்கிழமை நடை பெற்றது.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, மாணவ, மாண விகள், அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஓய்வுபெறும் ஆசி ரியர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கிய அமைச்சர் பின் னர் செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது:

ஆசிரியர்களின் கோரிக்கைகள் குறித்து தமிழக முதல்வர், துணை முதல்வர் கவனத்துக்கு கொண்டுசெல்லப்பட்டு விரைவாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். போதைப் பொருள்களைத் தடுப்பதில் காவல் துறை, கல்வித் துறைக்கு பொறுப்புணர்வு உண்டு.

திருச்சி மாவட்டத்தில் 'எமிஸ்' செயலியில் தகவல்களைப் பதிவேற் றம் செய்ய 149 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு, 1,114 அர சுப் பள்ளிகளில் பணி ஒதுக்கீடு செய்துள்ளோம். தமிழகம் முழுவதும் பள்ளிக் கல்வித் துறை சார்ந்த திட்டங்களின் செயல்பாடுகள், விவரங் கள் உள்ளிட்ட தகவல்களை 'எமிஸ்' செயலியில் பதிவேற்றம் செய்ய மேலும் 1,800 பேர் நியமிக்கப்பட உள்ளனர். அவ்வாறு பணி நியமனம் செய்யப்பட்டவுடன், ஆசிரியர்களுக்கு எமிஸ் செயலியில் தகவல்கள் பதிவேற்றம் செய்யும் பணிச் சுமை குறையும்.

கல்வித் துறை அலுவலர்கள் மீதான குற்றச்சாட்டுகளில் உண்மைத் தன்மை இருக்கும்பட்சத்தில், எவ்வித பாரபட்சமுமின்றி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழி.

பேட்டியின்போது, மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ், தமிழ்நாடுபட்டதாரி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழக மாநிலத் தலைவர் கி.மகேந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.

Post a Comment

0 Comments