புழல் மத்திய சிறையில் சமைய லர், லாரி ஓட்டுனர், நெசவு போதகர் பணிக்கு விண் ணப்பம் வரவேற்கப்படுகி றது.
இதுகுறித்து சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்ட அறிவிப்பு:
புழல் மத்திய சிறை-1ல் காலியாக உள்ள பணியிடங் களுக்கு விண்ணப்பதாரர்க ளிடமிருந்து விண்ணப்பங் கள் வரவேற்கப்படுகின்றன. பொன்னேரி கிளைச்சிறை யில் ஒரு சமையலர் இடம் நிரப்பப்படுகிறது. இப் பணிக்கு 1.7.2024 அன்று 18 வயது பூர்த்தியடைந்தவ ராகவும், 34 வயது பூர்த்திய டையாதவராகவும் இருக்க வேண்டும். ஊதியம் ₹15,900- 58,500. எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும். குறைந் தது 2 வருடம் சமையலர்பணியில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
புழல் மத்திய சிறை-1ல் ஒரு லாரி ஓட்டுநர் பணியி டம் நிரப்படுகிறது. இப்ப ணிக்கு 18 முதல் 32 வயதிற் குள் இருக்க வேண்டும். பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 2 வருடங் களும் எஸ்சி, எஸ்டி பிரி வினருக்கு 5 வருடங்களும் அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு உண்டு. ஊதியம் ₹19,500-71,900. குறைந்தது எட்டாம் வகுப்பு வரை படித்திருக்க வேண்டும். கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். குறைந்தது ஒரு வருடம் ஓட் டுநர் பணியில் முன் அனுப வம் பெற்றிருக்கவேண்டும். ஒரு நெசவு போதகர் பணி யிடம் நிரப்பப்படுகிறது. இப்பணிக்கு 18 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண் டும். ஊதியம் ₹19,500-71,900.
தமிழ்நாடு அரசு தேர் வுத்துறையினரால் கைத்தறி நெசவு சான்றிதழ் பெற்றி ருக்க வேண்டும். இப்பதவி களுக்கான விண்ணப்பங் கள் 13.9.2024ம் தேதிக்குள் சிறை கண்காணிப்பாளர். மத்திய சிறை -1, புழல் சென்னை-66. என்ற முகவ ரிக்கு வந்து சேர வேண்டும். 13.9.2024 மாலை 5 மணிக்கு மேல் பெறப்படும் விண் ணப்பங்கள் நிராகரிக்கப்ப டும்.மேலும் விவரங்களுக்கு 044-26590615 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்