பயிர்க் காப்பீட்டுக்கு ஜூலை 31-ஆம் தேதி கடைசி நாள் என வேளாண்மைத் துறை அமைச் சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்துள் ளார்.
அவர் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய் திக் குறிப்பு:
நிகழாண்டில் பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் ரூ.1,775 கோடியில் செயல்படுத்தப்ப டும் என்று நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மாநிலத் திலுள்ள 37 மாவட்டங்களில் குறுவை, சம்பா, நவரை ஆகிய மூன்று பருவங்களிலும் பயிர்க் காப்பீட்டுத் திட்டத் தைச் செயல்படுத்த தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
நிகழாண்டு குறுவை பருவத்தில், நெல், மக்காச்சோளம், துவரை, உளுந்து, பச்சைப்பயறு, நிலக்கடலை, ராகி, சோளம், தட்டைப்பயறு, எள், பருத்தி, சாமை, கொள்ளு ஆகிய 14 வேளாண் பயிர்களுக்கும், வாழை, மரவள்ளி, வெங்காயம், உருளை, கேரட், கத்திரி, வெண்டை, மஞ்சள், தக்காளி, பூண்டு, இஞ்சி, முட்டைகோஸ் ஆகிய 12 தோட்டக் கலைப் பயிர்களுக்கும் காப்பீடு செய்ய அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்