Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

LATEST NEWS -மின்வாரியத்தில் தொழிற்பழகுநர் பயிற்சிக்கு ஜூலை 31–க்குள் விண்ணப்பிக்கலாம்

LATEST NEWS -மின்வாரியத்தில் தொழிற்பழகுநர் பயிற்சிக்கு ஜூலை 31–க்குள் விண்ணப்பிக்கலாம்

மின்வாரியத்தில் ஓராண்டு தொழிற்பழகுநர் பயிற்சிக்கு ஜூலை 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மின்வாரியம் தெரிவித்துள்ளது.
இது குறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்ட செய்தி: தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (டான்ஜெட்கோ), மத்திய தொழிற்பழகுநர் பயிற்சி வாரியத் துடன் (தென் மண்டலம் சென்னை) இணைந்து பட்டய பொறி யியலில் என்ஜினியரிங்-எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் என்ஜினீயரிங், எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன் என்ஜினீயரிங், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் இன்ஸ்ட்ரூமென்டேஷன் என்ஜினீயரிங், கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் என்ஜினீயரிங், தகவல் தொழில்நுட் பம், சிவில் இன்ஜினியரிங் மற்றும் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் பிரிவில் பட்டயப் படிப்பில் (டிப்ளமோ) 2020, 2021, 2022 மற்றும் 2023-ஆம் ஆண்டுகளில் தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டில் வசிக்கும் மாணவர்களுக்கு ஓராண்டு தொழிற்பழகுநர் பயிற்சி வழங்கப்பட வுள்ளது.

இதில் சேர்ந்து தொழிற்பயிற்சி பெற விரும்பும் நபர்கள் www. boat-srp.com எனும் இணையதளத்தில் ஜூலை 31-க்குள் விண் ணப்பிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments