Ticker

6/recent/ticker-posts

 முக்கிய செய்திகள்  

10th Std Exam Result -2025 - Direct link -CLICK HERE

11th STD Exam Result 2025 - Direct link -CLICK HERE

12th STD Exam Results 2025 - Direct Link -CLICK HERE

NPHH கார்டுகளை AAY கார்டுகளாக மாற்றக்கோரும் விண்ணப்பம்-CLICK HERE

கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சம்பந்தமான செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE 

JOIN TELEGRAM GROUP-CLICK HERE
JOIN WHATSAPP CHANNEL -CLICK HERE
JOIN GOOGLE NEWS -CLICK HERE

SCHOOL NEWS -பள்ளிகள் திறப்பு- பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள முக்கிய செய்தி

SCHOOL NEWS -பள்ளிகள் திறப்பு- பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள முக்கிய செய்தி
தமிழகத்தில் பள்ளிகள் திறப்புக்கான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, பள் ளிகளில் வாரந்தோறும் காலை வணக்கக் கூட்டத்தில் போதைப் பொருள் எதிர்ப்பு தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவுள்ளது.

தமிழகத்தில் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிந்து ஜூன் 6-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படவுள் ளன. இந்த நிலையில் பள்ளிகள் திறப்பதற்கு முன்பு மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள், கல்விச் செயல்பாடுகள் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக் கல்வித் துறை தற்போது வெளியிட்டுள்ளது.

விவரங்கள் பின் வருமாறு: 
பள்ளி வளாகம், வகுப்பறைகள் மற்றும் தளவாடப் பொருள்களை நன்கு தூய்மைப்படுத்த வேண்டும். காலாவதியான ஆய் வக பொருள்களை முறைப்படி நீக்கம் செய்ய வேண்டும். கட்டடங்களின் மேற்பரப்பில் உள்ள குப்பைகளை அகற்றி மழைநீர் வடிந்து ஓடுவதற்கான பாதை சரியாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

மாணவர்களின் பாதுகாப்பு: மாணவர்கள் பயன்பாட்டுக்கான குடிநீர் தொட்டி, மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளின் உட்புறம் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்து, மாணவர்களுக்கு தூய்மையான மற்றும் பாது காப்பான குடிநீர் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்.

பள்ளி வளாகத்தில் உள்ள திறந்தவெளிக் கிணறுகள், கழிவுநீர் தொட்டி கள் மூடப்பட்டு பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். பழு தான நிலையில் உள்ள கட்டடங்கள், சுற்றுச்சுவர்களை மாணவர்கள் அணு காதபடி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து மின்சாதனங்கள் நல்ல முறையில் உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும், மரங் களில் ஒடிந்த கிளைகள் மற்றும் கட்டடங்களுக்கு இடையூறாக வளர்ந் துள்ள கிளைகளை அகற்ற வேண்டும்.

பெற்றோர்களை மாதந்தோறும் பள்ளிக்கு அழைத்து, மாணவர்களின் வருகை, உடல் நலம், மனநலம், கற்றல் அடைவு, விளையாட்டு உள்ளிட்ட பள்ளியின் அனைத்து நிகழ்வுகள் குறித்து எடுத்துக்கூற வேண்டும்.

போதை எதிர்ப்பு விழிப்புணர்வு: ஒவ்வொரு வாரமும் செவ்வாய் காலை வணக்கக் கூட்டத்தில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரையான மாண வர்களுக்கு போதை எதிர்ப்பு விழிப்புணர்வு சார்ந்த தகவல்கள், கவிதை, சுவரொட்டி, நாடகம், பாட்டு, திருக்குறள் கதைகள் இடம் பெறச் செய்ய வேண்டும்.

காலை உணவுத் திட்டம் அனைத்து குழந்தைகளுக்கும் குறித்த நேரத் தில், தரமானதாக அளிக்க வேண்டும். வாரம் ஒருநாள் மாணவர்களின் மனநலன் சார்ந்து ஆலோசனை வழங்க வேண்டும்.

மாணவர் சேர்க்கை: பள்ளிகள் திறந்த முதல் நாளே அனைத்துப் பள்ளி களிலும் மாணவர் சேர்க்கை கொண்டாட்டம் நடத்த வேண்டும். பள்ளி செல்லும் வயதுடைய அனைத்து குழந்தைகளையும் பள்ளியில் சேர்ப்பதை உறுதி செய்ய வேண்டும்.

மேலும், 'இல்லம் தேடி கல்வி' தன்னார்வலர்களால் கண்டுபிடிக்கப் பட்ட அனைத்து பள்ளி வயது குழந்தைகளையும் பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவற்றை அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களும் கடைப்பிடிக்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் அறிவுறுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments