11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு தேதி மற்றும் வழிகாட்டுதல்களை பள்ளிக்கல்வித்துறை தற்போது வெளியிட்டுள்ளது.
11 ,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு:
தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு பிப்ரவரி மாதம் 12ஆம் தேதி முதல் 17ஆம் தேதியும், 11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிப்ரவரி 19ஆம் தேதி முதல் 24ஆம் தேதிக்குள் நடத்தப்பட வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மாணவர்களின் செய்முறை தேர்வு மதிப்பெண்களை பதிவு செய்வதற்கான வெற்று மதிப்பெண் பட்டியலில் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் பிப்ரவரி 5ஆம் தேதி முதல் 17ஆம் தேதிக்குள் தேர்வு துறை இணையதளத்தில் இருந்து டவுன்லோட் செய்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் மாணவர்களின் மதிப்பெண் பட்டியலை தலைமை ஆசிரியரை பூர்த்தி செய்திருக்க வேண்டும்.
தேர்வின் போது மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சிறப்பு சலுகை வழங்கப்பட வேண்டும்.
செய்முறை தேர்வின் போது பள்ளிகளுக்கு வருகை தராத மாணவர்களின் விவரங்களையும் படிவத்தில் பூர்த்தி செய்து பள்ளிக்கல்வித்துறைக்கு சமர்ப்பிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்