Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

TNPSC - வேளாண்மை அலுவலர் மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர் பதவிகளுக்கான எழுத்துத் தேர்வுக்கான தேர்வு மையம்




தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிக்கை எண்.26/2023, நாள் 25.11.2023-ல் தமிழ்நாடு வேளாண்மை மற்றும் தோட்டக் கலைத் துறைகளில் அடங்கிய உதவி வேளாண்மை அலுவலர் மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர் பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு (கணினி வழித் தேர்வு) 07.02.2024 முற்பகல் மற்றும் பிற்பகல் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, சேலம் மற்றும் வேலூர் ஆகிய மையங்களில் நடைபெறுவதாக அறிவிக்கப் பட்டிருந்தது. 

மேற்படி தேர்வுக்கு தஞ்சாவூர் தேர்வு மையத்தை தேர்வு செய்த விண்ணப்பதாரர்களுக்கு அருகிலுள்ள திருச்சிராப்பள்ளி தேர்வு மையம் ஒதுக்கப்படும் எனத் தெரிவிக்கப் படுகிறது.

Post a Comment

0 Comments