Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

அரையாண்டு தேர்வு-இன்று முக்கிய முடிவு-பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்

அரையாண்டு தேர்வு - இன்று முக்கிய முடிவு



கனமழையால் பாதிக்கப்பட்ட சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் அரையாண்டு தேர்வு நடத்துவது குறித்து இன்று முக்கிய முடிவு.

அதிகாரிகளுடன் இன்று ஆன்லைன் வழியில் ஆய்வு கூட்டம் நடத்திய பிறகு முடிவு அறிவிக்கப்படும் என செய்தியாளர்களை சந்தித்தபோது பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் தெரிவித்துள்ளார்.

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் 4,435 பள்ளிகளில் மழை நீர் சூழ்ந்திருந்தது;

தற்போது மழை நீர் வெளியேற்றப்பட்டு நாளை பள்ளிகள் திறக்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

குடியிருப்புகளுக்குள் மழைநீர் புகுந்ததால் 20,000 புத்தகங்கள் சேதுமடைந்துவிட்டதாக தகவல் பெறப்பட்டுள்ளது!

32 பள்ளிகளில் மட்டும் சுவற்றில் தண்ணீர் ஊறுவதாகத் தகவல்கள் கிடைத்துள்ளது. அந்த பள்ளிகளை நேரில் ஆய்வு செய்து பள்ளிகள் திறப்பு குறித்து அறிவிப்போம்.

மழையால் ஒத்திவைக்கப்பட்ட அரையாண்டு தேர்வுகள் நடத்துவது குறித்து சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் செங்கல்பட்டு முதன்மை கல்வி அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தப்படும்.

மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு தான் அனைத்து முடிவுகளும் எடுக்கப்படும்

- பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்

4 மாவட்டங்களில் நாளை பள்ளிகள் திறப்பு 

9 நாட்களுக்குப் பிறகு சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நாளை பள்ளிகள் திறப்பு 

மிக்ஜாம் புயல் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில் நாளை திறப்பு

4 மாவட்டங்களில் 14 பள்ளிகள் மட்டும் திறக்க முடியாத நிலையில் இருப்பதாக கல்வித்துறை தகவல்

Post a Comment

0 Comments