செய்திக் குறிப்பு
செய்முறைத்தேர்வு பயிற்சிக்கு பதிவு செய்தல்:
நடைபெறவுள்ள மார்ச்/ஏப்ரல் 2024. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வெழுத விரும்பும் தனித்தேர்வர்களுக்கு அறிவியல் பாட செய்முறைத்தேர்வு பயிற்சிக்கு பதிவு செய்ய 10.08.2023 முதல் 21.08.2023 வரை மற்றும் 06.11.2023 முதல் 10.11.2023 வரை வாய்ப்பு வழங்கப்பட்டது.
தற்சமயம் தேர்வர்களின் நலன் கருதி அறிவியல் பாட செய்முறைத்தேர்வு பயிற்சிக்கு பதிவு செய்ய 28.12.2023 (வியாழக்கிழமை) முதல் 05.01.2024 (வெள்ளிக்கிழமை) வரை வாய்ப்பு வழங்கப்படுகிறது.
எனவே தேர்வர்கள் இதற்கான விண்ணப்பப் படிவத்தினை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் மேற்குறிப்பிட்ட நாட்களில் பதிவிறக்கம் செய்து, விவரங்களை பூர்த்தி செய்து இரண்டு நகல் எடுத்து 05.01.2024- ற்குள் சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகங்களை நேரில் அணுகி. பதிவுக்கட்டணமாக ரூ.125/- ஐ செலுத்தி தங்கள் பெயரைப் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
பொதுத்தேர்விற்கு பதிவு செய்தல்
செய்முறைத்தேர்வு பயிற்சிக்கு பதிவு செய்து பயிற்சி பெற்ற தேர்வர்கள் மட்டுமே அறிவியல் பாடப் பொதுத்தேர்வெழுத இயலும்.
மார்ச்/ஏப்ரல் 2024, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வெழுதவுள்ள இத்தேர்வர்கள் (முதன்முறையாக பத்தாம் வகுப்பு தேர்வெழுதவுள்ள / ஏற்கனவே பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வெழுதி அறிவியல் செய்முறைத்தேர்வில் தேர்ச்சி பெறாத /வருகை புரியாத தேர்வர்கள்). 27.12.2023 ( புதன் கிழமை) முதல் 10.01.2024 (புதன்கிழமை) வரை மற்றும் சிறப்பு அனுமதித்திட்டத்தில் 11.01.2024 (வியாழக்கிழமை)முதல் 12.01.2024 (வெள்ளிக்கிழமை) வரையிலான நாட்களில் அரசுத் தேர்வுகள் சேவை மையங்களுக்கு (Government Examinations Service Centres) சென்று செய்முறை பயிற்சி வகுப்பிற்கு பதிவு செய்வதற்கான ஒப்புகை சீட்டை சமர்ப்பித்து பொது தேர்விற்கு பதிவு செய்து கொள்ள வேண்டும்.
பின்னர் வழங்கப்படும் மார்ச்/ஏப்ரல் 2024 கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டைக் கொண்டே தேர்வர்கள் செய்முறைத்தேர்விற்கு அனுமதிக்கப்படுவர்.
மேலும் கூடுதல் விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகங்களைத் தொடர்பு கொள்ளுமாறு தேர்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்