மழை காலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பதில் என்னென்ன விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. அதனைப் பற்றிய முழு விவரங்கள் பின் வருமாறு:
2018ல் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் வழங்கிய வழிகாட்டு நெறிமுறையின் படி
01. அதிக மழையோ கனமழையோ பெய்தால் மட்டுமே பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க வேண்டும்.
02. லேசான மழையோ, தூரலோ இருந்தால் விடுமுறை அறிவிக்க கூடாது .
03. விடுமுறை குறித்த முடிவை, பள்ளி துவங்குவதற்கு மூன்று மணி நேரம் முன்னதாக எடுக்க வேண்டும்.
04. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்டம் முழுமைக்குமான மழை நிலவரம், பாதிப்பு நிலவரம், மழை நீர் தேங்கக் கூடிய பகுதிகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்து மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கையை அளிக்க வேண்டும்.
05. பாதிக்கப்பட்ட பகுதியில் மட்டுமே விடுமுறை அறிவிக்க வேண்டும். மாவட்டம் முழுமைக்கும் தேவையில்லாமல் விடுமுறை அறிவிக்க கூடாது.
06. மழைக்காலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கும் போது, அதனை ஈடு செய்யும் வகையில் சனிக்கிழமை போன்ற நாட்களில் வகுப்புகளை நடத்த வேண்டும்
07. விடுமுறை காரணமாக எந்த பாடங்களும் விடுபடாமல் மாணவர்களுக்கு முழுமையாக நடத்தி முடிப்பதை உறுதி செய்ய வேண்டும். பள்ளி வளாகங்களில் மழைநீர் தேங்கி இருந்தால்,அவற்றை அப்புறப்படுத்துவதற்கும், மாணவர்களின் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளித்தும் பள்ளிகள் செயல்பட வேண்டும்.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்