தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் காரணமாக பள்ளிகள் திறப்பு தேதியும் தள்ளி வைக்கப்பட்டது. இதன் காரணமாக சனிக்கிழமைகளிலும் வகுப்புகள் நடைபெறும் என பள்ளி கல்வித்துறையின் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய் அவர்கள் அறிவித்திருந்தார். மேலும் அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்கள், முதன்மை கல்வி அலுவலர்களின் ஆலோசனை கூட்டம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இன்று (27.06.2023) நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களான 10 ,11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மாலை நேர வகுப்புகள் கட்டாயம் நடத்தப்பட வேண்டும் என செய்திகள் வெளியாகின. இந்த நிலையில் மாலை நேர வகுப்புகள் கட்டாயம் என்ற தகவலுக்கு பள்ளி கல்வித்துறை தற்போது மறுப்பு தெரிவித்துள்ளது.
இதனைப் பற்றி பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது:
தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களான 10 ,11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்துவது எப்போதும் வழக்கமானதுதான் என்றும்,மேலும் தேவைப்படும் மற்றும் விருப்பமுள்ள பள்ளிகள் மாலை நேர சிறப்பு வகுப்புகளை நடத்திக் கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளனர். இது கட்டாயம் இல்லை எனவும் அறிவுறுத்தலாகவும் முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது எனவும் தெரிவித்துள்ளார்.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்