இந்த போட்டியில் பங்கேற்க ஏதுவாக தொடக்க நிலையில் 55 தொழிற் பிரிவுகளில் தங்கள் தனித்திறனை வெளிப்படுத்தும் விதமாக மாவட்ட அளவிலான திறன் போட்டிகள் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க naanmudhalvan.in.gov.in/tnskills/ என்கிற இணையத்தளம் மூலமாக தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க கடைசி தேதி 30.06.2023 ஆகும்.
இதற்கான வயது வரம்பு 01.01.1999 அன்றும், அதன் பிறகும் பிறந்திருக்க வேண்டும். குறிப்பிட்ட சில தொழிற் பிரிவுகளுக்கு 01.01.2002 அன்றும், அதற்கு பிறகும் பிறந்தவர்கள் தகுதியுடையவர்கள் ஆவர்.
5ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை கல்வித் தகுதிபெற்றவர்கள், பட்டயப் படிப்பு, பட்ட மேற்படிப்பு படித்தவர்கள் மற்றும் படித்து கொண்டிருப்பவர்கள், தொழிற் பயிற்சி நிலையம் (ஐ.டி.ஐ). தொழில் நுட்பக் கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரியில் படித்தவர்கள் மற்றும் படித்துக் கொண்டு இருப்பவர்கள், தொழிற்சாலைகளில் பணியில் உள்ளவர்கள் என அனைவரும் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவர். இது தொடர்பான விவரங்களை இணையதளத்தின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
கூடுதல் விவரங்களுக்கு உதவி இயக்குநர், மாவட்டதிறன் பயிற்சி அலுவலகம், (வட சென்னைஅரசினர் தொழிற் பயிற்சிநிலைய வளாகம்), சென்னை-21 என்கிற முகவரியில் அணுகலாம். தொடர்பு தொலைபேசி எண் 044-25201163
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்