Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

TNPSC TODAY PRESS RELEASED NEW

நில அளவைப் பதிவேடுகள் சார்நிலைப் பணியில் அடங்கிய நிலஅளவர் ; வரைவாளர்

மற்றும் தமிழ்நாடு நகர் ஊரமைப்பு சார்நிலைப் பணியில் அடங்கிய அளவர் உதவி வரைவாளர் ஆகிய பதவிகளுக்கு நேரடி நியமனம் செய்யும் பொருட்டு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் 29.07.2022 நாளிட்ட அறிவிக்கை எண் 18/2022-ன் வாயிலாக விண்ணப்பங்களைக் கோரியிருந்தது. 

இப்பதவிக்கான எழுத்துத்தேர்வு கடந்த 06.11.2022 முய மற்றும் பிபட அன்று நடைபெற்று எழுத்துத்தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண் மற்றும் தரவரிசை விவரங்கள் வெளியிடப்பட்டது. 15.02.2023 அன்று தேர்வாணைய இணையதளத்தில்

2) மேற்கண்ட பதவிகளுக்கான 1338 பணியிடங்கள் நிரப்புவதற்கு மூலச்சான்றிதழ்கள் சரியார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு 1:2 என்ற விகிதாசாரத்தில் விண்ணப்பதாரர்கள் அழைக்கப்பட்டனர். மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு 06.03.2023 (மு.ப(ம) பி.ய முதல் 11.03.2023 [முப (ம) பி.ப ] வரை சென்னை-03. தேர்வாணையர் சாலை (பிராட்வே பேருந்து நிலையம் மற்றும் கோட்டை ரயில் நிலையம் அருகில்) உள்ள தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெற்றது.

3) இந்த கலந்தாய்வில், மொத்தமுள்ள 1338 காலிப்பணியிடங்களில் 1206 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன. சில இடஒதுக்கிட்டு வகுப்பினங்களில் போதிய தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் இல்லாத காரணத்தால் 132 பணியிடங்கள் நிரப்பப்படவில்லை.  நிரப்பப்படாத அப்பணியிடங்களுக்கான நாள் அறிவிக்கப்படும். 

மேலும் நிரப்பப்படாத அப்பணியிடங்களுக்கான 2ஆம் கட்ட மூலச்சான்றிதழ்கள் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வுக்கான நாள் பின்னர் அறிவிக்கப்படும .132 காலிப்பணியிடங்களுக்கான வகுப்பின வாரியான விவரம் தேர்வாணைய இணையதளமான (www.tnpsc.gov.in) - ல் வெளியிடப்பட்டுள்ளது.




Post a Comment

0 Comments