விளையாட்டுத் துறையில் சர்வதேச / தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றிகளைப் பெற்று தற்போது நலிந்த நிலையிலுள்ள சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கு மாதஓய்வூதியம் ரூ-6000/- வீதம் வழங்கும் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்களை ஆணையத்தின் இணையதள முகவரி www.sdat.tn.gov.nமூலம் வரவேற்கப்படுகிறது.
தகுதிகள் (அ) குறைந்தபட்சதகுதி
சர்வதேச / தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்றிருத்தல், > சர்வதேச / தேசிய போட்டிகளில் முதலிடம் / இரண்டாமிடம் / மூன்றாம் இடங்களில் வெற்றிபெற்று இருத்தல் வேண்டும்.
தகுதியான விளையாட்டுப் போட்டிகள்
ஒன்றிய அரசினால் நடத்தப்பட்ட தேசிய அளவிலான பள்ளிகளுக்கு இடையிலான போட்டிகள்.
> அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான போட்டிகள். இந்திய ஒலிம்பிக் சங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய விளையாட்டு
போட்டிகள்,
சம்மேளங்களால் நடத்தப்பட்ட சர்வதேச/தேசியஅளவிலான விளையாட்டுப் ஒன்றிய அரசின் விளையாட்டு அமைச்சம் இந்திய விளையாட்டு ஆணையத்தால் நடத்தப்பட் டசர்வதேச / தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகள்.
(இ) வயதுவரம்பு
2023ம் வருடம் ஜனவரி மாதம் (31.01.2023) 58 வயது பூர்த்தி அடைந்தவராக
இருத்தல் வேண்டும். விண்ணப்பதாரர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்களாகவும், தமிழ்நாடு சார்பில் போட்டிகளில் பங்கேற்றவர்களாகவும் இருக்க வேண்டும்.
(ஈ) மாத வருமானம் விண்ணப்பதாரரின் மாத வருமானம் ரூ.15000/-க்குள்இருத்தல் வேண்டும்.
ஒன்றிய அரசின் விளையாட்டு வீரர்களுக்கான ஓய்வூதியம் / மாநில அரசின் ஓய்வூதியம் பெறுவர்கள் இத்திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற தகுதி இல்லை.
முதியோர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளில் (Veteran / Masters Sports Meet)வெற்றிபெற்றவர்கள் இத்திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெற தகுதி இல்லை.
(உ) முக்கிய தேதிகள் மற்றும் நேரம்
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய இணையதளம் மூலம் விண்ணப்பிக்க கடைசி நாள் மற்றும் நேரம். 19.04.2023 மாலை 5 மணி ஆகவே.
சென்னை மாவட்டத்தைச் சார்ந்த சிறந்த முன்னாள் விளையாட்டு வீரர் வீராங்கனைகள் இத்திட்டத்தில் சேர்ந்து பயன்பெறுமாறு சென்னை ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்