Ticker

6/recent/ticker-posts

 முக்கிய செய்திகள்  

10th Std Exam Result -2025 - Direct link -CLICK HERE

11th STD Exam Result 2025 - Direct link -CLICK HERE

12th STD Exam Results 2025 - Direct Link -CLICK HERE

NPHH கார்டுகளை AAY கார்டுகளாக மாற்றக்கோரும் விண்ணப்பம்-CLICK HERE

கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சம்பந்தமான செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள-CLICK HERE 

JOIN TELEGRAM GROUP-CLICK HERE
JOIN WHATSAPP CHANNEL -CLICK HERE
JOIN GOOGLE NEWS -CLICK HERE

தமிழக அரசு வேலை- அலுவலக உதவியாளர்- 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும்-50,000 ரூபாய் சம்பளம்!




அரசுத்தலைப்பு ஈப்பு ஓட்டுநர் மற்றும் அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கு நேரடி நியமனம்

தூத்துக்குடி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில், அரசு தலைப்பில் காலியாக உள்ள 3 (மூன்று) ஈப்பு ஓட்டுநர் மற்றும் 10 (பத்து) அலுவலக உதவியாளர்

பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கல்வித் தகுதி மற்றும் இதர தகுதிகள்

1. ஈப்பு ஓட்டுநர் - 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மோட்டார் வாகன சட்டம்1988 (மத்திய அரசு சட்டம் 59/1988)-ன் கிழான தகுதியுடைய அதிகாரியால் வழங்கப்பட்ட செல்லத்தக்க ஓட்டுநர் உரிமம் பெற்றிருத்தல் வேண்டும். ஐந்தாண்டுகளுக்கு குறைவில்லாமல் மோட்டார் வாகனங்களை ஓட்டியமைக்கான நடைமுறை அனுபவம் கொண்டவராக இருக்க வேண்டும்.

2. அலுவலக உதவியாளர் - 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்.

நிபந்தனைகள்

1. விண்ணப்பதாரர்கள் கல்வித்தகுதி, இருப்பிடம், சாதிச்சான்று, முன்னுரிமைச்சான்று, மற்றும் இதர சான்றுகளின் ஆதாரம் இணைத்து அனுப்பவேண்டும்.

2. இனசுழற்சி வயது மற்றும் கல்வித்தகுதியற்ற நபர்களிடமிருந்து வரப்பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

3. அரசு விதிகளின்படி மேற்குறிப்பிட்ட இனசுழற்சி முறை பின்பற்றி நியமனங்கள் மேற்கொள்ளப்படும்.

4. ஒவ்வொரு பணியிடத்திற்கும் தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டும்.

 5. விண்னாப்பதாரர் காலிப்பணியிடம் அறிவிக்கப்பட்ட மாவட்டத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும்.

6. சுய முகவரியுடன் கூடிய ரூ.25/-அஞ்சல் வில்லை ஒட்டப்பட்ட அஞ்சல் உறை 1( 10*4 inches postal cover ) இணைத்து அனுப்பப்பட வேண்டும்.

7. தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்காணல் நடைபெறும் விபரம் தனியே அஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.

8. நேர்கானால் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்வதற்கு பயணப்படி ஏதும் வழங்கப்படமாட்டாது.

9. விண்ணப்பதாரர்கள் அளித்த தகவல்கள் தவறு என பரிசீலனையில் கண்டறியப்பட்டால் அவரது விண்ணப்பம் தள்ளுபடி செய்யப்படும்.

10.நியமனத்தை ரத்து செய்வதற்கான அனைத்து அதிகாரமும் மாவட்ட ஆட்சியருக்கு உண்டு.



பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 10.04.2023 பிற்பகல் 5.45 மணிக்குள் கீழ்கண்ட முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்ப வேண்டும். காலதாமதமாக பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.


Post a Comment

0 Comments