சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் தரத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இது குறித்து மாமன்ற கூட்டத்தொடர் தொடக்க உரையில் மேயர் ஆர்.பிரியா கூறியதாவது: செய்முறை வகுப்புகளை மேம்படுத்த முதல்கட்டமாக ரூ.2 கோடி மதிப்பீட்டில் 10 பள்ளிகளில் ஆய்வகங்கள் மேம்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளன.
இசை ஆசிரியர்கள் உள்ள 20 சென்னை பள்ளிகளில் தலா ரூ.25,000 என ரூ.5 லட் சத்தில் இசைக்கருவிகள் கொள்முதல் செய்யப்படும். மாலை நேர சிறப்பு வகுப்பில் பங்கேற்கும் 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.1 கோடி செலவில் சிறு தீனி (சுண்டல், பயறு வகைகள்) வழங்கப்படும்.
ஆசிரியர்களின் திறனை மேம்படுத்தும் வகையில் இணைய வழியில் விரும்பும்பாடத்தை கற்க 20 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.10 மற்றும் 12-ஆம் வகுப்பில் 100 சதவீதம் தேர்ச்சி ஏற்படுத்தும் ஆசிரியர்களுக்கான ஊக்கத்தொகை ரூ.1,500 வழங்கிய நிலையில் ரூ.3,000-ஆக உயர்த்தப் பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
அதுபோல் ஏதேனும் ஒரு பாடத்தில் 100 சதவீதம் மதிப்பெண் பெறும் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை ரூ.1,000 வழங்கிய நிலையில் தற்போது ரூ.10,000-ஆக உயர்த்தப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்