பொதுமக்கள் இருக்கும் இடத்தில் இருந்தே "எங்கிருந்தும் எந்நேரத்திலும் https://tamilnilam.tn.gov.in/citizen/ என்ற இணையதள முகவரியை உள்ளீடு செய்து, இணையம் வாயிலாக பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்கலாம். உட்பிரிவு மற்றும் மனுவிற்கான கட்டணம் ஆகியவற்றை இணையம் வாயிலாக செலுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இப்புதிய சேவையின் மூலம் பொதுமக்கள் பட்டா மாற்றத்திற்கு விண்ணப்பிக்கும் பொருட்டு வட்டாட்சியர் அலுவலகங்கள், பொது சேவை மையங்களுக்கு செல்ல வேண்டிய அவசியம் இருக்காது. மேலும், பொதுமக்கள் நில உட்பிரிவிற்கான கட்டணம் மற்றும் செயலாக்க கட்டணங்களைச் செலுத்த வங்கிகளுக்கு நேரில் செல்லாமல் இணைய வழிலேயே செலுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கிராமபுற, நகர்புற நில ஆவணங்கள் கணினி படுத்தப்பட்டு, தமிழ் நிலம் என்னும் மென்பொருள் மூலம் இணையவழி பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. கணினி படுத்தபபட்ட வரைபடங்களை தனித்தனி நகர புலங்களுக்கான வரைப்படங்களாக மேற்குறிப்பிட்டுள்ள இணைய தளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளும் இப்புதிய வசதி மூலமாக பொதுமக்கள் கிராமபுற, நகர்புற நில வரைபடங்களை கட்டணமின்றி பெறலாம். மேலும், இவ்வரைபடம் மனை அங்கீகாரம் மற்றும் வங்கிக்கடன் பெறுதல் போன்ற இதர சேவைகளுக்கு அத்தியாவசியமாக விளங்குகிறது.
விண்ணப்ப நிலையை அறிய https://eservices.tn.gov.in/, eservicesnew/login/Appstatus.html என்ற இணையதள முகவரியை உள்ளீடு செய்து, பட்டாமாறுதல் மனுவின் நிலையினை உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம். பட்டா மாறுதலின் நடவடிக்கையின் போது, ஒவ்வொரு நிலைமையும், மனுதாரருக்கு குறுஞ்செய்தி வாயிலாக தெரிவிக்கப்படும்.
பட்டா மாறுதல் மனு அங்கீகரிக்கப்பட்ட பின்னர், பொதுமக்கள் தங்களது பட்டா மாறுதல் உத்தரவின் நகல், பட்டா/சிட்டா, புலப்படம், அ-பதிவேடு ஆகியவற்றை 'எங்கிருந்தும் எந்நேரத்திலும்’ https://eservices.tn.gov.in/ என்ற இணையவழி சேவையின் மூலமாக கட்டணமின்றி பார்வையிட்டு பதிவிறக்கமும் செய்து கொள்ளலாம்.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்