அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும், தங்களது ஆளுகைக்குட்பட்ட அனைத்து மேல்நிலை பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும், மார்ச்/ஏப்ரல்-2023 மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு எழுதவுள்ள மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் +2 மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு தேர்வெழுத சலுகை வழங்குதல் தொடர்பான கீழ்க்காணும் அறிவுரைகளை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
பள்ளித் தலைமையாசிரியர்களுக்கான அறிவுரைகள்:
1. பார்வையில் கண்டுள்ள அரசாணைகளில், அரசுத் தேர்வுத் துறையால் நடத்தப்படும் மேல்நிலை பொதுத் தேர்வுகளை எழுதும் தேர்வர்களுள், கீழ்க்காணும் ஆறு வகைகளுக்குட்பட்ட மாற்றுத் திறனாளித் தேர்வர்களின் நலன் கருதி, பிற மாணவர்களுக்கு சமமாக அவர்களும் எவ்வித குறைகளுமின்றி தேர்வெழுதி மதிப்பெண்கள் ஈட்டுவதற்கு ஏதுவாக அவர்களுக்கு குறிப்பிட்ட சலுகைகளை தேர்வு நேரங்களில் வழங்க அரசு அனுமதித்துள்ளது. (அரசாணைகளை அரசுத் தேர்வுகள் இயக்கக இணையதளத்தில் (www.dge.tn.gov.in) காணவாம்)
2. மேற்குறிப்பிட்ட அரசாணைகளின்படி, பொதுத் தேர்வெழுதும் தேர்வர்களுக்கு உடல் குறைப்பாட்டின் அடிப்படையில் வழங்கப்படும் சலுகைகள் குறித்து தங்கள் பள்ளியில் +2 பயிலும் மாற்றுத் திறனாளி பள்ளி மாணவர்களுக்கு பள்ளி தலைமையாசிரியர் எடுத்துரைக்க வேண்டும்.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்