தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித் துறையின்கீழ் இயங்கி வரும் அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவ / மாணவிகளும் பங்கேற்கும் வகையிலான கலை நிகழ்ச்சிகள் "கலைத்,திருவிழா" என்னும் பெயரில் நடைபெற உள்ளது.
கலைத்திருவிழாப் போட்டிகள் பின்வருமாறு 3 பிரிவில் (Category) நடத்தப்பெறுதல் வேண்டும்.
பிரிவு 1 : 6 முதல் 8 ஆம் வகுப்பு:
பிரிவு 2 : 9 மற்றும் 10 ஆம் வகுப்பு:
பிரிவு 3 : 11 மற்றும் 12ஆம் வகுப்பு
இம்மூன்று பிரிவில் நடைபெறும் போட்டிகள் பள்ளி நிலையில் தொடங்கி, அடுத்தடுத்த நிலைகளான வட்டார. வருவாய் மாவட்ட மற்றும் மாநில அளவிலான நிலைகளில் நடைபெறும்.
பள்ளி அளவில் நடத்தப்பெறும் போட்டிகளில் முதல் தகுதி பெறும் ஒருவர் /ஒரு குழு மட்டுமே வட்டார அளவில் நடைபெறும் போட்டியில் பங்கு பெற தகுதி பெறுவர். வட்டார அளவில் நடைபெறும் போட்டிகளில் முதல் இரு தகுதிகளை பெறும் தனிநபர் / குழுக்கள் மட்டுமே மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்பர். மாவட்ட அளவில் நடைபெறும் போட்டிகளில் முதல் தகுதியை பெறும் தனிநபர் /குழு மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்கேற்பர்.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்