Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

LATEST NEWS: ஆசிரியர்கள் நியமனத்துக்கு அரசு ஒப்புதல்

அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியமர்த்தப்பட்ட 16 சிறப்பாசிரியர்களின் நியமனங்களுக்கு பள்ளிக் கல்வித் துறை ஒப்புதல்
அளித்துள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறைச் செயலர் பி.சந்தரமோகன் வெளியிட்ட அரசாணை:

திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் அதன் நிர்வாகங்களால் முன்அனுமதி பெறா மல் அரசு விதிகளுக்கு முரணாக சிறப்பாசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இந்த ஆசிரியர்களுக்கு பணி நியமன ஒப்புதல் வழங்குவது குறித்து பள்ளி நிர்வாகங்களிடம் இருந்து பெறப்பட்ட கருத்துருக்கள் அந்தந்த மாவட்டக் கல்வி அலுவலர்களால் நிராகரிக்கப்பட்டன. இதை எதிர்த்து ஆசிரியர்கள் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்குத் தொடர்ந்தனர். இதில் மனுதாரர்களுக்கு சாதகமாக தீர்ப்பாணைகள் பெறப்பட்டன.
அந்தத் தீர்ப்பாணைகளை எதிர்த்து தமிழக அரசால் தாக்கல் செய்யப் பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. அதன்பின் மனுதாரர்களால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

இந்த நிலையில் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பாணைகளை செயல் படுத்தும் வகையில் 16 ஆசிரியர்களுக்கு அவர்கள் பணியில் சேர்ந்த நாள் முதல் நியமன ஒப்புதல் அளித்து, ஊதியம் மற்றும் பிற பலன்களை வழங்க வேண்டும். இது நீதிமன்ற ஆணை பெற்ற ஆசிரியர்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று அந்த அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments