போக்குவரத்துக் கழகங்களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என தமிழ்நாடு அர சுப் போக்குவரத்து கழக ஸ்டாப் கரப்ஷன் தொழிற்சங்க பேரவை வலியுறுத்தியுள்ளது.
நாகையில், அந்த பேரவையின் 5-ஆம் ஆண்டு கூட்டம் துணைத் தலைவர் ராஜா தலைமையில் வெள்ளிக்கிழமை நடை பெற்றது. இதில், அரசுப் போக்குவரத்துக்கழகங்களில் காலி யாக உள்ள பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி மூலம் நேர்மை யாக நிரப்ப வேண்டும், ஓய்வுபெற்ற 9,500 மூத்தக் குடிமக்களுக்கு உடனே அகவிலைப்படி வழங்க வேண்டும், போக்குவரத்து கழ கங்களில் விருப்ப ஓய்வு பெறும் பணியாளர்களின் வாரிசுகளுக்கு பணி வழங்க வேண்டும், போக்குவரத்து கழகங்களை தனியார் மய மாக்கும் போக்கை கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர் மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்திய ஊழல் எதிர்ப்பு இயக்க மாநிலத் தலைவர் ஆனந்த குமார், பேரவை பொதுச்செயலர் காமராஜ், பேரவை இணை பொதுச் செயலர் கோதண்டன், செயல் தலைவர் அன்பழகன், பேரவை துணைத் தலைவர்கள் செந்தில்குமார், விஜயகுமார், லிங் கத்துரை, துணைச்செயலர் முனியப்பன், பொருளாளர் மீனாட்சி சுந்தரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்