தமிழ்நாட்டில் சளி, காய்ச்சல் காரணமாக இன்ஃபுளுயென்சா தடுப்பூசி செலுத்துவது குறித்து பொது சுகாதாரத்துறை இயக்குனரகம் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் பரவலாக மழை இல்லையென்றாலும், சளி காய்ச்சல் பாதிப்பு உள்ளது. அதனால் மாவட்ட சுகாதார அலுவலர்கள் கண்காணிப்புப் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும்.
காய்ச்சல் பாதிப்பு உள்ள பகுதிகளை கண்காணிக்க வேண்டும்.
மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் விவரங்களை சேகரிக்க வேண்டும்.
மருத்துவமனைகளில் தேவையான படுக்கைகள் மற்றும் மருந்துகளை தயார் நிலையில் வைக்க வேண்டும்.
ஆரம்ப சுகாதார நிலையங்களில் இன்ஃபுளுயென்சா தடுப்பூசிகளை கையிருப்பில் வைத்திருக்க வேண்டும்.
இன்ஃபுளுயென்சா தடுப்பூசி குறித்து கர்ப்பினி தாய்மார்களுக்கும், குழந்தைகளுக்கும் செலுத்த அறிவுறுத்த வேண்டும்.
பள்ளிகளில் மாணவர்களுக்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக கண்காணித்து கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இருமல், சளி உள்ள நபர்களிடம் இருந்து விலகி இருக்க வேண்டும்.
இருமல், சளி, காய்ச்சல் உள்ள நோயாளிகள் கைகளை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். முகக் கவசம் அணிய வேண்டும்.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்