கிராமப்புற ஏழை விதவைகள் / கைவிடப்பட்ட/ ஆதரவற்ற பெண்களின் மேம்பாட்டிற்கான நாட்டுக்கோழி வளர்ப்பு திட்டம்!
நாட்டுக் கோழி வளர்ப்பை ஊக்குவிக்கவும், கிராமப்புறங்களில் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், ஏழ்மை நிலையில் உள்ள கணவனை இழந்த/ஆதரவற்ற / கைவிடப்பட்ட 38,700 பெண் பயனாளிகளுக்கு 4 வார வயதுடைய 40 நாட்டினக் கோழி குஞ்சுகள் 50% மானியத்தில் வழங்கப்படுகிறது.
ஒரு ஊராட்சி ஒன்றியத்திற்கு 100 பயனாளிகள் வீதம் மொத்தம் ரூ.624 லட்சம் செலவில் செயல்படுத்தப்படுகிறது.
ஒரு பயனாளிக்கு 50% பின் மானியமாக ரூ.1600/- வழங்கப்படுகிறது.
சென்னையை தவிர (புனித தோமையார் மலை) அனைத்து மாவட்டங்களிலும் ஊராட்சி ஒன்றியத்திற்கு 100 பயனாளிகள் வீதம் செயல்படுத்தப்படுகிறது.
திட்டத்தின் நன்மைகள் - முட்டைகள் உற்பத்தி செய்து விற்பனை செய்வதன் மூலமும், வளர்ந்த பெண்கோழிகள் (ம) சேவல்களை இறைச்சிக்காக விற்பனை செய்தும், ஒரு பயனாளி வருடத்திற்கு ரூ. 20,000 முதல் ரூ.25,000 வரை வருமானம் ஈட்டலாம்.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்