நேரடி நியமனங்களில் சமூக நீதியை வலுப்படுத்த, 2024-ம் ஆண்டில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த பொறியியல் பணிகள் தேர்வு மூலம் பட்டியலின மற்றும் பழங்குடியினருக்கான குறைவு காலிப்பணியிடங்களை (shortfall vacancies) நிரப்ப 50 தேர்வர்களை தெரிவு செய்துள்ளது.
மேலும், 2024-ம் ஆண்டு ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-I (தொகுதி I பணிகள்) மூலம் 12 குறைவு காலிப்பணியிடங்களையும், ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு - II (தொகுதி II மற்றும் IIA பணிகள்) மூலம் 135 குறைவு காலிப்பணியிடங்களையும், ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு -IV (தொகுதி IV பணிகள்) மூலம், 434 குறைவு காலிப்பணியிடங்களையும், ஆக மொத்தம் 581 பட்டியலின மற்றும் பழங்குடியினருக்கான குறைவு காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் தொழில்நுட்ப பணிகளிலும் குறைவு காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனத் தெரிவித்து கொள்ளப்படுகிறது.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்