பிளஸ் 2 பொதுத் தேர்வுக் காக மாணவர்களிடமிருந்து வசூலிக்கப்படும் கட்டணத்தை இணைய வழியில் டிச. 10-ஆம் தேதிக்குள் தலைமை ஆசிரியர்கள் அரசுக்கு செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, அரசுத் தேர்வுகள் இயக் ககத்தின் இயக்குநர், அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை:
நிகழ் கல்வியாண்டில் பிளஸ் 2 தேர்வுக் கட்டணமாக செய்முறைத் தேர்வு அடங்கிய பாடத் தொகுப்பில் பயிலும் மாணவர்களுக்கு ரூ.225, செய்முறைத் தேர்வு இல்லாத பாடத் தொகுப்பில் பயிலும் மாணவர்களுக்கு ரூ.175 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதில் தமிழை பயிற்று மொழியாகக் கொண்டு தேர்வெழுதும் அனைத்து பள்ளிமாணவர்களுக்கும் தேர்வுக்கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இதேபோல், எஸ்.சி., எஸ்.டி., எம்பிசி, சீர்மரபி னர் ஆகிய பிரிவினருக்கும், பெற்றோர் ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்துக்கும் மிகாமல்இருக்கும் பிசி, பிசி(முஸ்லிம்) பிரிவினருக்கும், பார்வை மற்றும் செவித் திறன் குறைந்த மாற் றுத்திறனாளி மாணவர்களுக்கும் விலக்கு அளிக்கப்படுகிறது.
இதர அனைவரிடம் இருந்து வசூலிக்கப்படும் கட்டணத்தை www.dge.tn.gov.in எனும் இணையதளத்தில் டிச. 10-ஆம் தேதிக் குள் செலுத்துமாறு தலைமை ஆசிரியர்க ளுக்கு முதன்மை கல்வி அலுவலர்கள் அறிவு றுத்த வேண்டும். 11-ஆம் வகுப்புத் தேர்வில் தேர்ச்சி பெறாத பாடங்களுக்கான தேர்வு கட்டணத் தொகையையும் இணையதளத்தில் வரும் நவ.20 முதல் செலுத்தலாம்.
பிளஸ்-2 பொதுத் தேர்வு முடிவுகள் அடங் கிய அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப் பெண் பட்டியலை ஆன்லைன் மூலமாக பதி விறக்கம் செய்து கொள்வதற்காக, அனைத்து பள்ளிகளும் ரூ.300 செலுத்தவும் அறிவுறுத் தப்படுகிறது. இது தொடர்பான சந்தேகங்க ளுக்கு பள்ளித் தலைமை ஆசிரியர்கள் சம்பந் தப்பட்ட அரசுத் தேர்வுகள் இயக்கக ஒருங்கி ணைப்பாளரைத் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்