தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் தனியார் பள்ளிகளுக்கு இணையான கல்வித்தரத்தை வழங்க தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் காலிப்பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு உத்தேசித்துள்ளது. அரசு பள்ளிகளில் காலி பணியிடங்கள் இருப்பதால் மாணவர்களின் கல்வித் திறன் பாதிக்கப்படும் என கூறப்படுகிறது.
இதனை தொடர்ந்து அரசுப்பள்ளிகளில் 10,000 க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதில் 5,786 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள், 2,000 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் 2,600 க்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் உள்ளன.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பள்ளிகளுக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில் மாணவர்களின் கல்வி திறனுக்கு பாதிப்பு ஏற்படுத்த கூடாது என்பதை கருத்தில் கொண்டு 2026ம் ஆண்டுக்குள் காலிப்பணியிடங்கள் அனைத்தும் நிரப்பப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்தமாதம் இறுதிக்குள் 3,000 ஆசிரியர்களுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் பணிநியமனம் வழங்குவார் என தெரிவித்தார். இந்த நடவடிக்கைக்கு முக்கிய காரணம் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகமாக இருப்பதே.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்