தமிழ்நாடு பள்ளிக் கல்வி சார்நிலைப்பணி பள்ளிக் கல்வித்துறையில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர்களைக் கொண்டு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் கீழ் உள்ள போதக காப்பாளர் காப்பாளினி மற்றும் இடைநிலை காப்பாளர்/காப்பாளினி பணியிடங்களை நிரப்புதல்- விருப்பமுள்ள ஆசிரியர்களின் விவரங்கள் கோரியது உரிய கருத்துருக்களை அனுப்பிட பள்ளித் தலைமையாசிரியர்களுக்குத் தகவல் தெரிவித்தல் சார்பு.
பார்வை. தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள், சென்னை.06 ந.க.எண்.072841சி3/2024 நாள்.07.11.2024
பார்வையில் காணும் தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகளில் பள்ளிக் கல்வித்துறையில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர் மற்றும் இடைநிலை ஆசிரியர்களைக் கொண்டு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் கீழ் உள்ள போதக காப்பாளர்/காப்பாளினி மற்றும்இடைநிலை காப்பாளர் காப்பாளினி பணியிடங்களை நிரப்புதல் சார்பாக விருப்பமுள்ள ஆசிரியர்களின் விவரங்கள் கோரப்பட்டுள்ளது.
எனவே பார்வையில் காணும் தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகளில் தெரிவித்துள்ளவாறு உரியப் படிவத்தில் விருப்பமுள்ள ஆசிரியர்களின் விவரங்களை பூர்த்தி செய்து தலைமையாசிரியரின் பரிந்துரையுடனும், சார்ந்த ஆசிரியரின் விண்ணப்பத்துடனும், 18:112024-க்குள் கருத்துருக்களை அனுப்பிட அனைத்து அரசு உயர்/மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது.
மேற்காண் பொருள் சார்ந்து ஆசிரியர் எவரும் விருப்பம் தெரிவிக்கவில்லை எனில் இன்மை அறிக்கையினை கட்டாயம் அனுப்பிட வேண்டும். இதில் காலதாமதம் ஏதும் ஏற்படின் சார்ந்த பள்ளித் தலைமையாசிரியரே முழுப் பொறுப்பேற்க நேரிடும் எனவும் தெரிவிக்கலாகிறது.
கருத்துருவில் இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள்.
11 தலைமையாசிரியரின் பரிந்துரைக் கடிதம்
2) சார்ந்த ஆசிரியரின் விருப்பம் தெரிவிக்கும் விண்ணப்பம்
3) உரியப் படிவம்
4) பணிப்பதிவேட்டின் முதல் இரண்டு பக்க நகல்கள் (தலைமையாசிரியர் சான்றொப்பத்துடன்)
5) படிவத்தில் கோரப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் பணிப்பதிவேட்டில் பதிவு செய்யப்பட்ட பக்க நகல் மற்றும் அதற்குரிய ஆணை நகல் (தலைமையாசிரியர் சான்றொப்பத்துடன்)
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்