காலாண்டு விடுமுறையில் இணைய வழியில் வகுப் புகள் நடத்தும் தனியார் பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப் படும் என கல்வித் துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். அரசு, அரசு உதவி மற்றும் தனியார் பள்ளிகளில் 1 முதல் பிளஸ் 2
வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு செப். 28 முதல் காலாண்டு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அக்.7-ஆம் தேதி மீண்டும் பள்ளி கள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர காலாண்டு விடுமுறை நாள்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது. மீறினால், அந்த பள்ளிகள் மீது துறை ரீதியான நட வடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என பள்ளிக் கல்வித்துறை எச்ச ரிக்கை விடுத்திருந்தது.
இந்தநிலையில் சென்னை தாம்பரம், மேடவாக்கம், நாமக்கல் ராசி புரம், கோயம்புத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள சில தனி யார் பள்ளிகள் தங்கள் மாணவர்களுக்கு இணையவழியில் வகுப்பு கள் நடத்தி வருவதாகவும், இதில் மாணவர்கள் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என வற்புறுத்தப்படுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.
உரிய நடவடிக்கை: தனியார் பள்ளிகளின் இந்த நடவடிக்கை
பெற்றோர்களின் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. விடு முறை நாள்களில் வகுப்புவாரியாக எடுக்கப்படும் சிறப்பு வேளை குறித்த அட்டவணையை சமூக வலைதளங்களில் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளிடம் கேட்ட போது, 'கல்வித் துறையின் எச்சரிக்கையை மதிக்காமல் சில தனியார் பள்ளிகள் இணையவழியில் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்துவ தாக பெற்றோரிடமிருந்து புகார்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. அவ்வாறு விதிமுறையை மீறி வகுப்புகள் நடத்தும் தனியார் பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என அவர்கள் தெரிவித்தனர்.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்