Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

நியாயவிலைக் கடைகளில் காலிப் பணியிடங்கள் புதிய உத்தரவு



நியாயவிலைக் கடைகளில் டிசம்பருக்குள் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்றுஅரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து கூட்டுறவு சங்கங்களின் வாளர் என்.சுப்பையன் வெளியிட்ட உத்தரவு 
நியாயவிலைக் கடைகளில் உள்ள விற் பனையாளர், கட்டுநர் காலிப் பணியிடங் களை கணக்கிட்டு அறிவிக்க வேண்டும். இந் தப் பணியை கூட்டுறவு சங்கங்களின் அலுவ லர்கள் மேற்கொள்ள வேண்டும். வேலைவாய்ப்பு அலுவலகத்தில் இருந்து தகுந்த வயது போன்ற தகுதிகளுடன் விற்ப னையாளர்கள், கட்டுநர்களின் பட்டியலைப் பெற வேண்டும். இந் தப் பணிகளை அக்.7-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும். அதன்பி றகு, காலிப் பணியிடங்களுக்கான தேர்வு குறித்த அறிவிப்பை செய் தித்தாள்களில் வெளியிட வேண்டும்.

விண்ணப்பிக்க நவம்பர் 7-ஆம் தேதியை கடைசி நாளாக அறி விக்க வேண்டும். மேலும், தகுதியுள்ள நபர்களைத் தேர்வு செய்து அவர்களுக்கான நேர்முகத் தேர்வை நவம்பர் இறுதியில் நடத்தி முடிக்க வேண்டும். டிசம்பர் மூன்றாவது வாரத்தில் தேர்வானவர்க ளின் இறுதிப் பட்டியலை வெளியிட்டு பணிகளை நிறைவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments