அரசு பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் நியமனத்தில் காலி பணியிடங்களை அதிகரிக்க வேண்டும் என தேர்வர்கள் டிஆர்பிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஆசிரியர் தகுதி தேர்வு எழுதிய ஆசிரியர்கள் தெரிவித்ததாவது:
அரசு பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் காலி பணியிடங்கள் 1768 என அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து காலி பணியிடங்கள் எண்ணிக்கை 2768 ஆக உயர்த்தப்பட்டது. இந்த நிலையில் ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்புவதற்காக தேர்வு நடத்தப்பட்டு ஒன்றரை மாதம் ஆன பிறகும் இன்னும் கீ ஆன்சர் கூட வெளியிடாமல் ஆசிரியர் தேர்வு வாரியம் தாமதம் செய்து வருவதாகவும் பெரிதும் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
மேலும் அரசு நிர்ணயத்துஉள்ள ஆசிரியர் மாணவர் விகிதாச்சாரத்தின் அடிப்படையில் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் பதவியில் 8000 மேற்பட்ட காலி இடங்கள் உள்ளதாகவும் இதற்காக தற்காலிக ஆசிரியர்களை கொண்டு மாணவர்களுக்கு பாடம் நடத்த ஏற்பாடு செய்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து ஆசிரியர் தகுதி தேர்வு எழுதிய தேர்வுகள் 8000 காலி பணியிடங்களை தற்போது நடந்துள்ள போட்டி தேர்வை கொண்டு நிரப்பபட வேண்டும் என ஆசிரியர் பெரு வாரியத்திற்கு தேர்வுகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்