நெற்பயிர்களில் ஏற்படும் ஊட்டச்சத்துக் குறை பாடுகளை கண்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்யும் வழிமுறைகளை தமிழகவேலாண் துறை அறிவித்துள்ளது.
இது குறித்து அந்தத் துறை சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
நெற்பயிரின் இலைகள் முற்றிலும் மஞ்சளாக மாறினால், ஒரு சதவீதம் சூப்பர் பாஸ்பேட் மற்றும் 0.5 சதவீதம் பெரஸ் சல்பெட் கரைசலை பயிர்களின் இலைகளில் தெளிக்க வேண்டும். அதே போல், நெற்பயிர்கள் ஒழுங்கற்ற முறையில் வளர்வது மற்றும் நெல் மணியில் அதிக அளவில் பதர் காணப்பட்டால், ஒரு சதவீதம் சூப் | பர் பாஸ்பேட் மற்றும் மக்னீசியம் சல்பேட் கரைசலை செடிகளில் | தெளிக்கவேண்டும்.
மேலும்,இலையின் நுனி உதிர்தல் மற்றும் இலைக்கருகல் போன்ற பிரச்னைகள் ஏற்பட்டால், ஒரு சதவீதம் சூப்பர் பாஸ்பேட் மற்றும் 0.5 சதவீதம் துத்தநாக (ஜீன்க்) சல்பேட் கரைசலை தெளிக்கலாம்.
இதில் ஒரு சதவீதம் என்பது ஒரு லிட்டர் தண்ணீரில் 10 கிராம் கரைப்பானை கலக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்