பார்வையில் காணும் கடிதத்தின்படி, கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் கல்வி மாவட்டம் அகஸ்தீஸ்வரம், அரசு மேல்நிலைப் பள்ளியில் கணினி பயிற்றுநர் நிலை-1 ஆகப் பணிபுரியும் திரு.சா.கிறிஸ்டோபர் தங்கராஜ் என்பார் வயது முதிர்வில் 30.04.2024 பிற்பகல் ஓய்வு பெறவுள்ளதால் ஊதியத்துடன் கூடிய மருத்துவ சான்றின் பேரில் ஈட்டா விடுப்பு துய்த்த நாட்களுக்கு ஏற்றவாறு கணக்கில் சேர்க்கப்படும் ஈட்டிய விடுப்பு குறைவு செய்தல் சார்பாக தெளிவுரை வேண்டி பார்வை 5 ன்படிகருத்துரு விண்ணப்பம் பெறப்பட்டுள்ளது.
திரு.சா.கிறிஸ்டோபர் தங்கராஜ் என்பார் பார்வை 1 மற்றம் 2ல் காணும் அரசு கடிதத்தின்படி தாம் பணியேற்ற நாள் முதல் அனுபவித்த ஊதியத்துடன் கூடிய மருத்துவ சான்றின் பேரில் ஈட்டா விடுப்பு துய்த்த நாட்களுக்கு ஏற்றவாறு கணக்கில் சேர்க்கப்படும் ஈட்டிய விடுப்பு குறைவு செய்த நாட்களை மீள ஈட்டிய விடுப்பு கணக்கில் சேர்த்திட வேண்டி விண்ணப்பம் அளித்துள்ளார்.
பார்வை 3ல் காணும் அரசு கடிதம் வெளியிடப்பட்ட நாளான 23122019 க்குப் பின்னர் ஊதியத்துடன் கூடிய மருத்துவ சான்றின் பேரில் ஈட்டா விடுப்பு துய்த்த நாட்களுக்கு ஏற்றவாறு கணக்கில் சேர்க்கப்படும் ஈட்டிய விடுப்பு குறைவு செய்த நாட்களை மீள ஈட்டிய விடுப்பு கணக்கில் சேர்த்திட நடவடிக்கை மேற்கொள்ள தலைமையாசிரியருக்கு தெரிவிக்கலாகிறது. மேலும் தமிழ்நாடு விடுப்பு விதிகளின்படி தக்க நடவடிக்கை மேற்கொள்ள தலைமையாசிரியர் அறிவுறுத்தப்படுகிறார்.
மேலும், இவ்வலுவலகத்திற்கு தெளிவுரை சார்ந்து கருத்துருக்களை அனுப்புவதை தவிர்த்திடவும் தலைமையாசிரியருக்கு அறிவிக்கலாகிறது.

0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்