Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

மாவட்ட அளவிலான இளைஞர்களுக்கான கலைப்போட்டிகள் அறிவிப்பு - முழு விவரங்கள்

தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறையின் சார்பில் 17 வயது முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்களிடையே முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு விழாவினைக் கருப்பொருளாகக் கொண்டு மாவட்ட /மாநில அளவிலான கலைப்போட்டிகள் குரலிசை, பரதநாட்டியம், கிராமிய நடனம், கருவியிசை மற்றும் ஓவியம் ஆகிய 5 பிரிவுகளில் திருநெல்வேலி மாவட்ட அளவிலான போட்டிகள் திருநெல்வேலி கலை பண்பாட்டு வளாகத்தில் 07-10-2023 அன்று நடைபெறவுள்ளது.




குரலிசை, கருவியிசை, பரதநாட்டியம், போட்டிகள் காலை 10.00 மணிக்கும், கிராமிய நடனம் மற்றும் ஓவியம் ஆகிய போட்டிகள் மதியம் 2.00 மணிக்கும் நடைபெறும். குழுவாக போட்டியில் பங்கு பெற அனுமதியில்லை. தனிநபராக அதிக பட்சம் 5 நிமிடம் நிகழ்ச்சி நடத்திட அனுமதிக்கப்படுவார்கள். குரலிசையிலும், நாதசுரம், வயலின், வீணை, புல்லாங்குழல், ஜலதரங்கம், கோட்டுவாத்தியம், மாண்டலின், கிதார், சாக்சபோன், கிளாரினெட் போன்ற கருவி இசைப்போட்டிகளில் 5 வர்ணங்கள் மற்றும் கற்பனை இசை (மனோதர்ம இசை) நிகழ்த்தும் தரத்தில் உள்ள இளைஞர்கள் பங்குபெறலாம்.

 தாளக்கருவிகளான தவில், மிருதங்கம், கஞ்சிரா, கடம், மோர்சிங், கொன்னக்கோல்

ஆகிய பிரிவுகளை சார்ந்தவர்கள் ஐந்து தாளங்களில் வாசிக்கின்ற தேர்ச்சி பெற்றவர்களாக இருக்கவேண்டும்.

பரதநாட்டியத்தில் 3 வர்ணங்கள் மற்றும் பாடல்கள் நிகழ்த்தும் நிலையில் உள்ளவர்கள்போட்டியில் பங்கேற்கலாம்.

கிராமிய நடனத்தில் கரகாட்டம், கணியான்கூத்து, காவடியாட்டம், புரவியாட்டம், காளை ஆட்டம், மயிலாட்டம், மரக்கால் ஆட்டம், ஒயிலாட்டம், புலியாட்டம், தப்பாட்டம் (பறையாட்டம்) மலை மக்கள் நடனங்கள் போன்ற பாரம்பரிய கிராமிய நடனங்கள் அனுமதிக்கப்படும்.

ஓவியப்போட்டியில் பங்கேற்பவர்களுக்கான ஓவிய தாள்கள் மட்டுமே வழங்கப்படும். அக்ரிலிக் வண்ணம் மற்றும் நீர்வண்ணம் மட்டுமே பயன்படுத்த வேண்டும். நடுவர்களால் கொடுக்கப்படும் தலைப்பில் மட்டுமே ஓவியங்கள் வரையப்பட வேண்டும். அதிக பட்சம் 3 மணி நேரம் வரைய அனுமதிக்கப்படுவார்கள்.

மாவட்ட போட்டிகளில் வெற்றி பெறும் இளைஞர்களுக்கு முதல் பரிசாக ரூ.6500/-மும், இரண்டாம் பரிசாக ரூ.4500/-மும், மூன்றாம் பரிசாக ரூ.3500/-மும் வழங்கப்படவுள்ளது. மேலும், முதல் பரிசு பெறுபவர்கள் மாநில அளவிலான கலைப்போட்டிகளில் கலந்துகொள்வார்கள். மேலும், விவரம் வேண்டுவோர் கலை பண்பாட்டுத்துறையின் இணையதளம் www.artandculture.tn.gov.in வாயிலாக விவரங்களை பெறலாம் அல்லது கலை பண்பாட்டுத்துறையின் திருநெல்வேலி மண்டல அலுவலகத்தின் தொலைபேசி எண்ணை 0462-2901890 தொடர்பு கொண்டு விவரங்கள் பெறலாம். இவ்வாய்ப்பினை கலைத்திறன் மிக்க திருநெல்வேலி மாவட்ட இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

கலைப்போட்டிகள் நடைபெறும் இடம்:

மண்டலக் கலை பண்பாட்டு மையம், 870/21, அரசு அலுவலர் ஆ குடியிருப்பு,
(தொழிலாளர் வைப்பு நிதி அலுவலகம் அருகில்) திருநெல்வேலி - 7. தொலைபேசி எண்:0462-2901890

Post a Comment

0 Comments