Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

பெண்களுக்கு 1000 ரூபாய் உரிமைத் தொகை: முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை : யார் யாருக்கு வழங்கப்படும்!




பெண்களுக்கு 1000  ரூபாய் உரிமைத்தொகை வழங்குவது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் இன்று ஆலோசனை நடத்தினார். 


பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் திட்டம் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் அமலுக்கு வர இருக்கும் நிலையில் யார் யாருக்கு வழங்க வேண்டும் என்ற பட்டியலும் தயாரிக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் 2023-2024அஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தாக்கல் செய்தார். இதில் பெண்களுக்கான சிறப்பு அறிவிப்புகள் குறித்து கூறுகையில் தகுதிவாய்ந்த குடும்பத் தலைவிகளுக்கு வரும் நிதியாண்டில்  மாதம் 1000 ரூபாய் உரிமைத் தொகை September  15ம் தேதி முதல் வழங்கப்படவுள்ளது எனத் தெரிவித்து இருந்தார்.

இதனை தொடர்ந்து யார் யாருக்கெல்லாம் உரிமை தொகை பெற தகுதியானவர்கள்,யாருக்கெல்லாம் இந்தத் தொகை பொருந்தாது என்ற கேள்வி மக்களிடையே எழுந்தது.

இந்தநிலையில் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் உரிமைத்தொகை வழங்கும் திட்டம் வரும் செப்டம்பர் 15ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. 


இந்த திட்டத்தின் கீழ் நடைபாதையில் வணிகம் செய்யும் மகளிர், கட்டுமானத் தொழிலில் பணிபுரியும் மகளிர், சிறியகடைகள், சிறுதொழில் நிறுவனங்களில் சொற்ப ஊதியத்தில் பணிபுரியும் மகளிர் உள்ளிட்டோர் இந்த திட்டத்தின் கீழ்பயன் பெறுவார்கள்.

மகளிர் உரிமைத் தொகை வழங்குவது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் உதயநிதி, சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், வருவாய் துறை அமைச்சர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசுஉள்ளிட்டஅமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.




Post a Comment

0 Comments