Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

palli kalvithrai - பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள முக்கிய செய்தி

தமிழகத்தில் 2022-23-ம் கல்வியாண்டு ஆசிரியர்களுக்கான பொது மாறுதல்கள் மற்றும் பதவி உயர்வுகள் சம்பந்தமான அறிவிப்பை கல்வித்துறை சமீபத்தில் வெளியிட்டது. 


இதனைத் தொடர்ந்து பொது மாறுதல் மற்றும் பதவி உயர் கலந்தாய்வில் பங்கேற்க விரும்புபவர்கள் கல்வி மேலாண்மை தகவல் அமைப்பு (எமிஸ்) வாயிலாக விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டனர்.

இந்த நிலையில்  கலந்தாய்வு ஒத்தி வைக்கப்பட்டு இருப்பதாக கல்வித் துறை நேற்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளன.

பள்ளிக்கல்வி ஆணையர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கை செய்தி:

நிர்வாக காரணங்களுக்காக நடைபெற இருந்த பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வுகள் (தொடக்கக்கல்வி மற்றும் பள்ளிக்கல்வி) தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகிறது. கலந்தாய்வு நடைபெறும் தேதி பின்னர் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளன.

Post a Comment

0 Comments