Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

Educational Minister :பள்ளி கல்வித்துறை அமைச்சர் வெளியிட்டுள்ள செய்தி

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் வெளியிட்டுள்ள முக்கிய செய்தி அதன் முழு விவரங்கள் பின்வருமாறு:




தஞ்சாவூர் மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சிகளில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் பங்கேற்றார் அதற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது தெரிவித்ததாவது:

மாணவர்கள் எப்போதும் தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும், பொதுத்தேர்வில் வாங்கும் மதிப்பெண்கள் குறைவாக இருந்தாலும், அதிகமாக இருந்தாலும், உங்களுக்கான தனித்திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் Public Exam முடிவுகள் என்பது ஒரு வகையான தேர்வுதானே தவிர யாரும் பயப்படக்கூடாது என்றும் ,உங்களின் திறமைக்கான நாற்காலி எப்போதும் உங்களுக்காக காத்துக் கொண்டிருக்கும் என்றும், இதற்காக தான் நமது தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் நான் முதல்வன் என்ற திட்டத்தை உருவாக்கி உள்ளார் எனவும் தெரிவித்துள்ளார்.

Public Exam Result - தேதியில் மாணவர்களை வழி நடத்துவதற்காக பயிற்சிகள் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments