தமிழகத்தில் TN TET தேர்வு நடைபெற்று அதற்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இந்த தேர்வு முடிவுகளில் மிகக் குறைந்த அளவிலேயே தேர்வர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
இது கல்வியாளர்களை பெரிதும் பேசு பொருளாக இருந்த நிலையில், விடைத்தாள்களை திருத்துவதில் நடந்த குளறுபடிகள் தான் தேர்ச்சி சதவீதம் குறைந்தது காரணம் என தேர்வர்கள் குற்றம் சாட்டிஉள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
எடுத்துக்காட்டாக ஒரு கேள்வியில் இந்தியாவில் எந்த மாநிலத்தில் ரயில் போக்குவரத்து கிடையாது? என்ற கேள்விக்கு மேகலாயா என்ற விடையை TRB அறிவித்து அதற்கு மதிப்பெண் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த கேள்விக்கு சரியான பதில் சிக்கிம் என்பது சரியான விடை என தேர்வர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்கள் ஆசிரியர் தகுதி தேர்வு சிறிய குறை கூட இல்லாமல் நடத்தப்படும் வேண்டும் எனவும், TET இரண்டாம் தாள் மதிப்பீடு செய்ததில் ஏற்பட்ட குளறுபடிகள் குறித்து தேர்வர்களிடமிருந்து பெறப்பட்டுள்ள விடைகளை கல்வியாளர்கள் கொண்டு ஆய்வு செய்து சரியான Answer பட்டியலை தயாரிக்க வேண்டும் எனவும் ,அதன் அடிப்படையில் அனைத்து விடைத்தாள்களை மறுமதிப்பீடு செய்து புதிய முடிவுகளை வெளியிட வேண்டும் என வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்