தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் திருவாரூர் மாவட்டத்தில் நடத்தப்பட்ட தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தில் சார்பில் நடத்தப்பட்ட நிகழ்வில் கலந்து கொண்டார். இந்த நிகழ்விற்கு பின் செய்தியாளர்களை சந்தித்தபோது தெரிவித்ததாவது:
தமிழகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு எப்போது நடத்தப்படும் என செய்தியாளர் கேட்கப்பட்ட கேள்விக்கு கடந்த இரண்டு வருடங்களாக போட்டித் தேர்வுகள் நடத்தப்படவில்லை எனவும் ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பாக 149 government order ரத்து செய்ய வேண்டும் எனவும் பலரும் கோரிக்கை விடுத்து வருவதால் அது குறித்து ஆலோசித்து வருவதாகவும், அதற்கான முடிவை எடுத்த பிறகு உரிய அறிவிப்பு வரும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் திமுக தேர்தல் வாக்குறுதியாக சொன்னதை அனைத்தும் ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருவதாகவும், தேவை வரும்போது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
புதிய ஆசிரியர்களை நியமிக்க வாய்ப்புள்ளதா என்ற செய்தியாளர் கேட்ட கேள்விக்கு , காலி பணியிடங்களை நிரப்புவதற்கு TRB - யிடம் கால அட்டவணை வழங்கப்பட்டு உரிய நேரத்தில் தேர்வுகள் நடத்தி முடிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்