வேலூர் மாவட்டத்தில் ஆதி திராவிடர் நலத்துறையின் கீழ் செயல்படும் தொடக்கப் பள்ளிகளில் ஓராசியர் பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடங்களை பதவி உயர்வு மூலம் நிரப்ப சிறிது காலம் ஆகக்கூடும் என்பதால் அப்பள்ளிகளில் மாணவர்களின் கற்றல் கற்பித்தல் திறன் பாதிக்கப்படாத வகையில் தற்காலிகமாக இடைநிலை ஆசிரியர்களை ரூ.7,500 மாதத் தொகுப்பூதியத்தில் நியமனம் செய்திட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளன.
இந்த காலி பணியிடங்கள் முற்றிலும் தற்காலிகமானது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
காலி பணியிடங்கள் பற்றிய முழு விவரங்கள்:
வேலூர் மாவட்டத்தில் செட்டிக்குப்பம், கத்தாழம்பட்டு, சேக்கனூர், சத்துவாச்சாரி, பென்னாத்தூர் ஆர்.வெங்கடாபுரம், வெட்டுவானம், கம்மசமுத்திரம், கீழுர் கவசம்பட்டு, கே.வி.குப்பம், காட்டுபுத்தூர், சோழவரம் ஆகிய தொடக்கப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் பணியி டம் தலா ஒன்று காலியாக உள்ளது.
இந்தப் பணிக்கு வரையறுக்கப்பட்ட கல்வித் தகுதிகளுடன் ஆசிரியர் தகுதித் தேர்விலும் தேர்ச்சி பெற்று, இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தில் தன்னார்வலர்களாக பணிபுரிந்து வருபவர்கள் அல்லது வரையறுக்கப்பட்ட கல்வி தகுதிகளுடன் ஆசிரியர் தகுதி தேர்விலும் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பள்ளி அமைந்துள்ள பகுதி அதன் அருகில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி:
வியாழக்கிழமை(பிப். 9) மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்