தமிழக அரசுப் பள்ளிகளில் காலியாகவுள்ள பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்களை பணியமர்த்துவதற்கான நடவடிக்கைகள் விரை வுபடுத்தப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.
இது தொடர்பாக திருச்சியில் சனிக்கிழமை அவர் மேலும் கூறியது: அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் கற்றல் திறன் அதிகரிப்பதுடன், அவர்கள் அதிக மதிப்பெண்களும் பெறு வதால் சேர்க்கையும் அதிகரித்துள்ளது.
அதற்கேற்ப தகுதியான ஆசிரியர்களை பணியமர்த்த வேண்டியதும் அரசின் கடமை. அதன் அடிப்படையில்தான் 3,000-க்கும் மேற்பட்ட பட்டதாரி ஆசிரியர் மற்றும் வட்டார வள மைய ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது. தேர்வுகள் நடத்தி சான்றிதழ் சரிபார்க்கும் பணி நடந்து கொண்டிருந்த நிலையில், ஆசிரியரல்லாத பணியாளர்கள் நீதிமன்றம் சென்றதால் அந்தப் பணி தடைபட்டது. இடைநிலை ஆசிரியர்கள் குறித்து அதிமுக ஆட்சியில் 10 ஆண்டு களாக கண்டுகொள்ளவே இல்லை. இடைநிலை ஆசிரியர் காலிப் பணியிடங்களையும் சேர்த்து நிரப்புவதற்கான நடவடிக்கையை திமுக அரசு எடுத்து வருகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளார்.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்