மத்திய அரசில் காலியாக உள்ள 8,326 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மத்திய அரசின் பல்வேறு துறைகள், அமைச்சகங்கள், அலுவ லகங்களில் உள்ள காலிப்பணியிடங்கள், பணியாளர் தேர்வா ணையம் மூலம் நிரப்பப்படுகின்றன.
அவ்வகையில், எம்டி எஸ் எனப்படும் பன்னோக்கு (தொழில் நுட்பம் சாராத) பணியாளர் பணிக்கு 4,887 காலி இடங்கள் மற்றும் ஹவில்தார் (சிபிஐசி மற்றும் சிபிஎன்) பணிக்கு 3,439 காலி இடங்கள் என மொத்தம் 8,326 காலிப்பணியிடங்களை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நிரப்பவுள்ளது.
இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் குறைந்தபட்ச கல்வித் தகுதியாக 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண் டும். விருப்பம் உள்ளவர்கள் https://ssc.gov.in 2என்னும் இணையதளத்தில் ஜூலை 31-க்குள் விண்ணப்பிக்க வேண் டும். மேலும், விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்த ஆக.1 வரை காலக்கெடு கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும், விண்ணப்பிக்கும் முறை, தேர்வு தேதி, தேர்வு முறை உள்ளிட்ட அனைத்து விவரங்களும் பணியாளர் தேர்வு மையத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளி யிடப்பட்டுள்ளது என மத்திய அரசு பணியாளர் தேர்வா ணையம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்