Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

RTE- மூலம் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பித்தல்- முக்கிய தகவல்

சென்னை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் சிறுபான்மையற்ற நர்சரி மற்றும் துவக்கப் பள்ளிகள் / மெட்ரிக்குலேசன் பள்ளிகள் / மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளிகளில் 2024- 2025 ஆம் கல்வி ஆண்டில் 25% இட ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கை கோரும் குழந்தைகளின் பெற்றோர் www.rte.tnschools.gov.in என்ற இணையதளத்தில் 22.04.2024 முதல் 20.05.2024 வரையிலான நாட்களில் இணைய வழியாக விண்ணப்பிக்கலாம். பெற்றோர்கள் | விண்ணப்பத்தாரர்கள் இணைய வழியாக எங்கிருந்து வேண்டுமானாலும் விண்ணப்பிக்கலாம்.
மேலும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலகங்கள், வட்டார கல்வி அலுவலகங்கள் மற்றும் வட்டார வள மைய அலுவலகங்களில் கட்டணமின்றி விண்ணப்பிக்கத் தக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பெற்றோர்கள் / விண்ணப்பதாரர்கள் கீழ்க்கண்ட சான்றிதழ்களை உரிய அலுவலரிடம் பெற்று பதிவேற்றம் செய்ய வேண்டும்.

1. பிறப்புச் சான்றிதழ்

2. வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினர் கீழ் விண்ணப்பிக்க சாதிச் சான்றிதழ்

3. வாய்ப்பு மறுக்கப்பட்ட சிறப்பு பிரிவினர் கீழ் விண்ணப்பிக்க உரிய சான்றிதழ்

4. நலிவடைந்த பிரிவின் கீழ் விண்ணப்பிக்க பெற்றோரின் ஆண்டு வருமானம் 2 இலட்சத்திற்கும் கீழ் உள்ள வருமானச் சான்றிதழ்

5. இருப்பிடச் சான்றிதழ்

எல்.கே.ஜி வகுப்புக்கு விண்ணப்பிக்கும் குழந்தைகள் 01.08.2020 முதல் 31.07.2021 தேதிக்குள்ளும் 1-ம் வகுப்புக்கு விண்ணப்பிக்கும் குழந்தைகள் 01.08.2018 முதல் 31.07.2019 தேதிக்குள்ளும் பிறந்திருக்க வேண்டும். பள்ளியின் 25 சதவீத ஒதுக்கீட்டு இடங்களைவிட கூடுதலாக விண்ணப்பங்கள் வந்திருந்தால், மே 28-ம் தேதி குலுக்கல் முறையில் சேர்க்கை நடைபெறும்.

சேர்க்கைக்கு தெரிவு செய்யப்பட்ட மாணாக்கர்களின் விவரம் மற்றும் காத்திருப்போர் விவரம் ஆகியவற்றை மே 29-ம் தேதி மாலை 5 மணிக்குள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு, சேர்க்கைக்கு தேர்வான குழந்தைகளின் பெற்றோருக்கு குறுஞ்செய்தி மூலம் இத்தகவல் அனுப்பப்படும், எனத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

Post a Comment

0 Comments