Teacher eligibility test - ல் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கான செய்தி அதனைப் பற்றிய முழு விவரங்கள் பின்வருமாறு:
TET தேர்வில் வெற்றிபெற்றவர்களுக்கு நேரடி பணி நியமனம் வழங்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அன்புமணி ராமதாஸ் அவர்கள் வெளியிட்ட அறிக்கை:
TET தேர்வில் வெற்றி பெற்றவர்களை இடை நிலை ஆசிரியர்களாகவும், பட்டதாரி ஆசிரியர்களாகவும் நேரடியாக பணியமர்த்துவது குறித்து ஒரு வாரத்துக்குள் முடிவெடுத்து அறிவிக்கப்படும் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து 25 நாட்கள் ஆகியும் தமிழக அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணிகளுக்காக Tamilnadu Teacher Recruitment Board -ன் மூலம் நடத்தப்பட்ட TET தேர்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு கடந்த 2013-ஆம் ஆண்டுக்குப் பிறகு 10 ஆண்டுகளாக ஆசிரியர் பணி வழங்கப்படவில்லை.
மேலும் அதற்கு மாற்றாக ஒருவர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றாலும், மீண்டும் ஒரு நியமனத் தேர்வில் தேர்ச்சி பெற்றால்தான் ஆசிரியராக முடியும் என்ற 149 அரசானை அறிவிக்கப்பட்டன.
இந்த அநீதிக்கு எதிராக TET தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் கடந்த 5 ஆண்டுகளாக போராடி வருகின்றனர். அவர்களுக்கு பாமக துணை நிற்கிறது. அரசாணை 149-ஐ ரத்து செய்து, TET தேர்வில் வெற்றி பெற்றவர்களை நேரடியாக இடை நிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்