தொடக்கக் கல்வி - 2022-3ஆம் கல்வியாண்டிற்கான ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு - செயல்முறை ஆணை வெளியீடு ஆசிரியர் நலன் சார்ந்த கோரிக்கைகள்
பார்வையில் காணும் செயல்முறை ஆணையின்படி பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக் கல்வித் துறை ஆசிரியர்களுக்கான 2022-23ஆம் ஆண்டிற்கான பொதுமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வினை கல்வி தகவல் மேலாண்மை முறைமை (EMIS) இணையதளம் வாயிலாக நடத்திட வழிகாட்டுதல்கள் மற்றும் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. பார்வையில் கண்ட செல்முறைகள் தொடர்பாக ஆசிரியர்களின் நலன் சார்ந்த கீழ்க்கண்ட கோரிக்கைகளை தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அமைப்பின் சார்பில் தங்களின் மேலான கவனத்திற்குக் கனிவுடன் சமர்ப்பிக்கின்றோம்.
கோரிக்கைகள்:
1. பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு தொடர்பாக சென்னை உயர்நீதி மன்றத்தில் நிலுவையில் உள்ள மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பை எதிர்நோக்கி பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்விற்கான கலந்தாய்வு அறிவிக்கப் படவில்லை எனத் தெரிகிறது, அதே நேரத்தில் பட்டதாரி ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு அறிவிக்கப் பட்டுள்ளது. இதில் ஒன்றியத்திற்குள் மாறுதல் கலந்தாய்வு நடத்துவதில் எவ்விதப் பிரச்சனையும் இல்லை ஆனால், ஒன்றியம் விட்டு ஒன்றியம் மற்றும் மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கலந்தாய்வு நடத்தினால் அந்தந்த ஒன்றியத்தில் பல ஆண்டுகாலம் பதவி உயர்வுக்குத் தகுதிபெற்று பதவி உயர்வை எதிர் நோக்கிக் காத்திருப்பவர்களுக்குபதவி உயர்வுக்கான வாய்ப்பு இல்லாமல் போய்விடும். பிற ஒன்றியங்களிலிருந்தும், பிற மாவட்டங்களிலிருந்தும் மாறுதல் மூலம் பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்களில் பணியில் சேரும் நிலை உருவாகும்.
எனவே, பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்குத் தகுதி பெற்றுள்ள ஆரம்பப் பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் இடைநிலை ஆசிரியர்களின் நலன் கருதி ஒன்றியம் விட்டு ஒன்றியம் மற்றும் மாவட்டம் விட்டு மாவட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப் பட்டுள்ள பட்டதாரி ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வை நிறுத்தி வைத்து உத்தரவிட வேண்டுமாய்த் தங்களைக் கனிவுடன் வேண்டுகிறோம்.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்