திருப்பத்தூர் மாவட்டத்தில் கோயில் பாதுகாப்பு காவலர் பணிக்கு ஓய்வு பெற்ற காவலர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இப்பணிக்கு அமர்த்தப்படும் நபர்களுக்கு சம்பளம்: 8500 ரூபாய்
இந்த வேலை வாய்ப்பு பற்றியும் திருப்பத்தூர் எஸ் பி அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்ட செய்தி குறிப்பு:
திருப்பத்தூர் மாவட்ட திருக்கோயில்களில் 24 சிறப்பு கோயில் பாதுகாப்பு காவலர் பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும் இந்த காலி பணியிடங்களை நிரப்புவதற்கு விருப்பமுள்ள 62 வயதிற்குட்பட்ட ஓய்வு பெற்ற காவலர்கள் மற்றும் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களிடம் இருந்து மனுக்கள் பெறப்படுவதாகவும் செய்தி வெளியாகி உள்ளன.
மனுக்களை எங்கு கொடுக்க வேண்டும்:
ஓய்வு பெற்ற காவலர்கள் திருப்பத்தூர் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் ,ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் துணை இயக்குனர், முன்னாள் படைவீரர் நலன், வேலூர் எனும் முகவரிகளுக்கு மனுக்களை ஜனவரி 27ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளன.
0 Comments
Kalvi Alert நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் Kalvi Alert செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. Kalvi Alert இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ Kalvi Alert குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்வி அலர்ட்