Header Ads Widget

Ticker

6/recent/ticker-posts

தமிழக அரசு வேலை - 8-ம் தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் அரசு வேலை




நாமக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் அரசுத் தரப்பில் காலியாக உள்ள ஒரு ஈப்பு ஒட்டுநர் பணியிடத்தினை பழங்குடியினருக்கான இட ஒதுக்கீட்டில், குறைவுப் காலிப்பணியிடமாக (Shortfall Vacancy) சிறப்பு ஆட்சேர்ப்பு முகாம் (Special Recruitment Drive) மூலம் நிரப்பிடும் பொருட்டு தகுதியான நபர்களிடமிருந்து 21.01.2023 முதல் 31.01.2023 முடிய அலுவலக வேலை நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 05.45 மணி முடிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பதவியின் பெயர்-ஈப்பு ஓட்டுநர்

மொத்தப்பணியிடங்கள்-01 (ஒன்று மட்டும்)

இனச் சுழற்சி மற்றும் இட ஒதுக்கீடு விவரங்கள்,-பழங்குடியினர் (Scheduled Tribes) மட்டும்.

வயது (01.07.2023 அன்று)-குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.-அதிகபட்சம் 42 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி

எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சிறப்புத் தகுதி

தகுதியான அலுவலரால் வழங்கப்பட்ட செல்லத்தக்க ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். வாகனம் ஓட்டுவதில் குறைந்தபட்சம் ஐந்தாண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்-ஊதிய அட்டவணையில் கிடை நிலை எண். 08. ரூ.19500 62000 என்ற ஊதிய ஏற்றமுறையில் அரசு நிருணயித்துள்ள படிகளுடன்.

விண்ணப்ப படிவம்
இப்பணியிடத்திற்கான மாதிரி விண்ணப்ப படிவத்தினை namakkal.nic.in என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்க கடைசி நாள்.

31.01.2023 பிற்பகல் 05.45 மணி வரை.


நிபந்தனைகள்.

1. தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தினை namakkal.nic.in என்ற இணையதளத்தில் உள்ள மாதிரி விண்ணப்பப்படிவத்தினை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அனுப்பப்பட வேண்டும்.

2.1988ஆம் ஆண்டு மோட்டார் வாகனச் சட்டப்படி தகுதியான அலுவலரால் வழங்கப்பட்ட செல்லத்தக்க ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.





Post a Comment

0 Comments